ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள் மீது சரமாரி தாக்குதல்: நீலகிரியில் காவலர் இடமாற்றம்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை தாக்கிய காவலர் சுல்தான் அலாவுதீன் ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப் பிரியா உத்தரவிட்டுள்ளார்.

நீலகிரி : நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை தாக்கிய காவலர் சுல்தான் அலாவுதீன் ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப் பிரியா உத்தரவிட்டுள்ளார்.

கோத்தகிரி ராம்சந்த் பகுதியில் நேற்று மாலை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் சென்ற ஓர்க்சாப் பணியாளர் கார்திக் (20) என்ற நபரை போலீசார் துரத்தி பிடித்தனர்.

இதில் நிலை குலைந்த அவர் தவறி கீழே விழுந்தார். கீழே விழுந்த நபரை போலீஸ் காவலர் சுல்தான் அலாவுதீன் கடுமையாக தாக்கினார். மேலும், அவ்வழியாக வந்த மற்றொரு வாகன ஓட்டியையும் நடு ரோட்டில் வைத்து காவலர் சுல்தான் அலாவுதீன் தாக்கும் போது அவரும் நிலை தடுமாறி விழுந்தார். இதைப் பார்த்த பொது மக்கள் காவலரை கண்டித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பிரச்சனை பெரிதாவதை உணர்ந்த கோத்தகிரி காவல் நிலைய துணை ஆய்வாளர் நசீர், சம்பந்தப்பட்ட நபர்களை வீட்டிற்கு செல்லுமாறு அனுப்பி வைத்தார். இச்சம்பவம் ராம்சந்த் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அங்குள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவுகளைப் பெற்று தாக்குதலில் ஈடுபட்ட போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் பொதுமக்கள் வலியுறுத்தி காவல் துணை ஆய்வாளர் நசீரின் காரினை முற்றுகையிட்டனர். இந்நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட சுல்தான் அலாவுதினிடம் விசாரணை மேற்கொண்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப் பிரியா அவரை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...