சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டு தண்டனையில் இருந்து தப்பியுள்ளார்.
சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டு தண்டனையில் இருந்து தப்பியுள்ளார்.
கடந்த மாதம் புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரம் அருகே உள்ள பள்ளிவாசல் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்காக மேடை அமைக்க அனுமதிக்காத போலீசையும், நீதிமன்றத்தையும் பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா அவதூறாகவும், மிகவும் கொச்சையாகவும் பேசினார்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அவர் மீது வழக்குப் பதியப்பட்டது. ஆனால், தமிழக போலீஸ் அவரை கைது செய்யவே இல்லை. இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சி.டி.செல்வம் அமர்வு எச்.ராஜா மீது தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்து, எச்.ராஜாவுக்கு நோட்டிஸ் அனுப்பியது. இது தொடர்பான வழக்கில் இன்று விசாரணை நடைபெற்றது.
விசாரணையின் போது காலை 11 மணிக்கு எச்.ராஜா நீதிபதிகள் முன் ஆஜரானார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சி.டி.செல்வம் அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.
மன்னிப்பு
இதையடுத்து, வழக்கு விசாரணையில் நீதிமன்றங்களை அவமதிக்கும் விதத்தில் பேசியதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளார். "நான் பேசியது தவறுதான். கோபத்தில் உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டேன். நான் பேசியது தவறு என்று தாமதமாகத்தான் உணர்ந்தேன். இதற்காக நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறேன்." என்று கூறினார்.
இவர் மன்னிப்பு கேட்டதை அடுத்து இவர் மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மன்னிப்பு கேட்டதன் மூலம் தண்டனையில் இருந்து தப்பி உள்ளார் எச்.ராஜா.