மாற்று வீடு வழங்கும் திட்டத்தில் பெயர் விடுவிப்பு : கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

கோவை : குடிசை மாற்று வாரியத்தால் மாற்று வீடு வழங்கும் திட்டத்தில் சித்தாபுதூர் வி.கே.கே.மேனன் சாலை அருகே இருப்பவர்களின் பெயர் விடுபட்டு போனதால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

கோவை : குடிசை மாற்று வாரியத்தால் மாற்று வீடு வழங்கும் திட்டத்தில் சித்தாபுதூர் வி.கே.கே.மேனன் சாலை அருகே இருப்பவர்களின் பெயர் விடுபட்டு போனதால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

கோவை வி.கே.கே.மேனன் சாலையில் குடிசைமாற்று வாரியத்துக்கு சொந்தமான குடியிருப்பு அமைந்துள்ளது. குடியிருப்பின் அருகிலேயே ஏராளமான ஆக்கிரமிப்பு வீடுகளும் அமைந்துள்ளன. 

குடிசை மாற்று வாரிய வீடுகள் பழுதடைந்த நிலையில், குடியிருப்பில் வசிக்கும் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு, கீரணத்தம் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. அங்கு ஆக்கிரமிப்பில் இருந்த 54 பேருக்கும் பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யப்பட்டது. ஆனால், அவர்களுக்கு வீடுகள் வழங்கப்படவில்லை. 

இந்த நிலையில், வீடு கிடைக்காத 54 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இன்று ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 

இதனையடுத்து, அலுவலகத்திற்கு வந்த சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, 54 பேருக்கும் உடனடியாக வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார். இதனையடுத்து, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...