தொழிலாளர் குடியிருப்புகளுக்கு அடிப்படை வசதிகள் செய்யாததால் கூடுதல் செலவினம் ஏற்படுவதாக தோட்ட தொழிலதிபர்கள் வேதனை

கோவை : சொத்து வரி, தொழில் வரி உள்ளிட்ட வரிகளை முறையாக வசூலிக்கும் தமிழக அரசு, தொழிலாளர் குடியிருப்புகளுக்கு உரிய அடிப்படை வசதிகளை செய்து தராததால் கூடுதல் செலவினம் ஏற்படுவதாக தோட்ட தொழிலதிபர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கோவை : சொத்து வரி, தொழில் வரி உள்ளிட்ட வரிகளை முறையாக வசூலிக்கும் தமிழக அரசு, தொழிலாளர் குடியிருப்புகளுக்கு உரிய அடிப்படை வசதிகளை செய்து தராததால் கூடுதல் செலவினம் ஏற்படுவதாக தோட்ட தொழிலதிபர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 

தமிழ்நாடு தோட்ட தொழிலதிபர்கள் சங்கத்தின் 65-வது ஆண்டு குழு கூட்டம் கோவையில் உள்ள தனியார் உணவக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில், தமிழக அரசு சார்பில் தொழிலாளர் நலத்துறை தலைமை செயலாளர் சுனில் பாலிவால் கலந்து கொண்டார். 



பின்னர் செய்தியாளர்களிடம் தமிழ்நாடு தோட்ட தொழிலதிபர்கள் சங்கத்தின் செயலாளர் பிரதீப் சுகுமார் பேசியதாவது :- தோட்ட அதிபர்களால் தொழிலாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் வீடுகளுக்கு அரசு சொத்து வரி வசூலிப்பதை நிறுத்த வேண்டும். சொத்துவரி, தொழில் வரி உள்ளிட்ட வரிகளை வசூலித்த போது அரசு தொழிலாளர் குடியிருப்புகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் அடிப்படை வசதிகளை செய்து தருவதில்லை என்பதால் தொழிலதிபர்களுக்கு கூடுதல் செலவினம் ஏற்படுகிறது. 



மேலும், தற்போதைய மழை காரணமாக மலைகளில் அமைந்துள்ள தேயிலை, காப்பி, ரப்பர் போன்ற தோட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. அதிபர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை சீர்செய்யும் வகையில், நீண்ட கால மற்றும் குறுங்கால கடனுதவிகளையோ அல்லது மானிய தொகைகளையோ வழங்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். 16 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள தொழிலாளர் பிடித்த தொகைகளை வழங்குவது தொடர்பாக தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலதிபர்கள் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. தொழிலாளர் நலத்துறையில் அது தொடர்பான தகவல்கள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் தீர்வு ஏற்படும். 



தொடர் மழை காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பு தொடர்பாக ஆண்டு இறுதியிலேயே கணிக்க முடியும். தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு 5 சதவீதம் அளவிற்கு கேளிக்கை விடுதிகள் அல்லது எக்கோ டூரிசம் திட்டங்களைச் செயல்படுத்த மத்திய அரசு அனுமதியளிக்க வேண்டும், என்றார். 



Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...