அன்னூர் அருகே தகாத உறவால் வாலிபர் அடித்துக் கொலை : போலீசார் விசாரணை

கோவை : அன்னூரில் மனைவியுடன் தகாத உறவு வைத்துக் கொண்ட வாலிபரை ஆத்திமடைந்த கணவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை : அன்னூரில் மனைவியுடன் தகாத உறவு வைத்துக் கொண்ட வாலிபரை ஆத்திமடைந்த கணவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சூலூர் அடுத்த அரசூரைச் சேர்ந்த வாலிபர் மணிகண்டன். இவர் அந்தப் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், அதே அரசூர் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் என்பவரின் மனைவி சத்யா என்பவருக்கும், மணிகண்டனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்த விவகாரம் சத்யாவின் கணவர் ரஞ்சித்திற்கு தெரிய வந்ததால், அவர் இருவரையும் கண்டித்ததுடன், இது குறித்து மணிகண்டன் மீது சூலூர் காவல்நிலையத்தில் கடந்த வாரம் புகார் அளித்துள்ளார்.இது பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி, பின்னர் குடும்ப விவகாரம் என்பதால் சமரசம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். 

இருப்பினும், மணிகண்டன் மற்றும் சத்யா இருவரும் தொடர்ந்து பழகி வந்ததால், ஆத்திரமடைந்த ரஞ்சித் தனது நண்பர்கள் மூலமாக மணிகண்டனைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். மணிகண்டனும் உள்ளூர்வாசி என்பதால், நண்பர்களை வைத்து மது குடிக்க நேற்று இரவு அன்னூர் அழைத்து வந்துள்ளனர். மது குடித்த பின்னர் போதையில் இருந்த மணிகண்டனை ரஞ்சித் தனது நண்பர்களுடன் சேர்ந்து அடித்து கொலை செய்துள்ளனர். பின்னர், கொலையை தற்கொலையாக மாற்றும் நோக்கில் அன்னூர் அருகே பச்சாபாளையம் குளத்தில் சடலத்தை வீசி சென்றுள்ளனர். இதையடுத்து, அனைவரும் தலைமறைவாகியுள்ளனர். 

இந்த நிலையில், இன்று அந்த குளத்தின் வழியே சென்ற பொதுமக்கள் குளத்தில் சடலம் மிதப்பதைக் கண்டு அன்னூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் நிகழ்விடத்திற்கு வந்த அன்னூர் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...