கோவையில் ஏலச்சீட்டு நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்தவர் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ஒப்படைப்பு

கோவை : கோவையில் ஏலச்சீட்டு நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்து தலைமறைவாக இருந்த நபரை, பாதிக்கப்பட்டவர்களே பிடித்து கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

கோவை : கோவையில் ஏலச்சீட்டு நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்து தலைமறைவாக இருந்த நபரை, பாதிக்கப்பட்டவர்களே பிடித்து கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.



கோவை சரவணம்பட்டி பகுதியில் சிவ சூர்யகிருஷ்ணா என்ற ஏலச்சீட்டு நிறுவனத்தை முரளிதரன் என்பவர் நடத்தி வந்தார். இவர் கோவையில் பூமார்க்கெட், காளப்பட்டி போன்ற பல்வேறு பகுதிகளிலும் கிளை ஆரம்பித்து செயல்பட்டு வந்தார். அதேபோல இவர்  நடத்திவரும் ஏலச்சீட்டுகளில் நூற்றுக்கணக்கானவர்களிடம் லட்சக்கணக்கான ரூபாய்களை வசூல் செய்துள்ளார். இதில் ஏலச்சீட்டில் கட்டிய பணத்தை பொதுமக்கள் திருப்பிக் கேட்டபோது காலம் தாழ்த்தி வந்தார். 



இந்நிலையில், ஆறு மாதங்களுக்கு முன்னர் முரளிதரன் தான் நடத்தி வந்த நிறுவனங்களை மூடிவிட்டு, தலைமறைவு ஆனார். பல கோடி ரூபாயை மோசடி செய்து தலைமறைவான முரளிதரன் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களே முரளிதரனை தேடி கண்டுபிடித்துள்ளனர். 



கோவையை அடுத்த கணுவாய் பகுதியில் தலைமறைவாக இருந்த முரளிதரனை பிடித்து கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். முரளிதரன் மீது நடவடிக்கை எடுப்பதோடு, தங்களது பணத்தை திரும்ப பெற்று தர வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...