வீட்டில் பதுக்கி வைத்து கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை: கோவையில் ஆறு பேர் கைது

கோவை: கோவை ராமநாதபுரம் போலீசார் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த ஆறு பேரை கைது செய்து அவர்களிடமிருந்த 1 கிலோவுக்கும் மேற்பட்ட கஞ்சா மற்றும் ரூ.35 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

கோவை: கோவை ராமநாதபுரம் போலீசார் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த ஆறு பேரை கைது செய்து அவர்களிடமிருந்த 1 கிலோவுக்கும் மேற்பட்ட கஞ்சா மற்றும் ரூ.35 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

ராமநாதபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் நேற்று உக்கடம் பைபாஸ் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஆர்.ஜி.நகர் அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர்.

இதையடுத்து அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில் அவர்கள் கேரள மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த கிஜாஸ் (21), ஆலப்புழாவைச் சேர்ந்த அஸ்வின் ராஜ் (21), கோழிக்கோட்டை சேர்ந்த சானு (21), வடகரையைச் சேர்ந்த அஸ்வின் (22), கொல்லத்தைச் சேர்ந்த அஜிஸ் (21), அம்ஜீத் (21), ஆகியோர் என்பது தெரியவந்தது.

மேலும் இவர்கள் ஆர்.ஜி நகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்து கஞ்சாவை பதுக்கி வைத்து கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனைத் தொடர்ந்து வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒரு கிலோ 500 கிராம் கஞ்சா, ரூபாய் 35 ஆயிரம், 6 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...