கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் ராக்கிங் விவகாரம்; நான்கு மாணவர்கள் மீது நடவடிக்கை

கோவை: கோவை அரசு மருத்துவக் கல்லூரியின் மருத்துவ மாணவர்கள் ராக்கிங் செய்தது தொடர்பாக, ராக்கிங் தடுப்பு குழு உத்தரவின் பேரில் நான்கு மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோவை: கோவை அரசு மருத்துவக் கல்லூரியின் மருத்துவ மாணவர்கள் ராக்கிங் செய்தது தொடர்பாக, ராக்கிங் தடுப்பு குழு உத்தரவின் பேரில் நான்கு மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் திருவண்ணாமலையை சேர்ந்த இரண்டாம் ஆண்டு மாணவரை அவரது சீனியர் மாணவர்கள் ராக்கிங் செய்துள்ளனர். அதேபோல சினிமா பாணியில் என்னை தெரியாதா? என்னை ஊருக்கே தெரியும் உனக்கு தெரியாதா? என்று கேட்டு ஜூனியர் மாணவரை மனம் வருந்தும்படி கிண்டல் பேசி உள்ளனர்.

மேலும், அந்த மாணவனைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இப்படியிருக்க பாதிக்கப்பட்ட ஜூனியர் மாணவர் தனது மாமாவின் உதவியுடன் டெல்லியில் செயல்படும் ராக்கிங் தடுப்புக் குழுவிற்கு புகார் அளித்துள்ளார். இந்நிலையில், ராக்கிங் தடுப்புக் குழுவினர் இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு டீன் அசோகனுக்கு உத்தரவிட்டுள்ளனர்.



இந்நிலையில் டீன் தலைமையிலான குழுவினர் நடத்திய விசாரணையில் ஜூனியர் மாணவரை சீனியர் மாணவர்கள் ராக்கிங் செய்தது உறுதியானது. இதையடுத்து, கல்லூரி நிர்வாகம் ராக்கிங்கில் ஈடுபட்ட நான்கு மாணவர்களை விடுதியில் இருந்து ஒரு ஆண்டுக்கு சஸ்பெண்டு செய்ததுடன், ராக்கிங்கிற்கு முக்கிய காரணமாக இருந்த ஒரு மாணவனை ஒரு மாதத்திற்கு கல்லூரியில் இருந்தும் சஸ்பெண்ட் செய்துள்ளனர்.

அதேபோல ராக்கிங் தொடர்பாக புகார் அளிக்க அனைத்து நடவடிக்கைகளும் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால், இன்னும் பல்வேறு கல்லூரிகளிலும் ராக்கிங் கொடுமைகள் தொடர்ந்து நடந்த வண்ணம் தான் உள்ளது. இதில் பொதுமக்களுக்கு மருத்துவம் பார்க்கும் உன்னத பணியை செய்யும் மருத்துவ மாணவர்களே இதுபோன்ற மோசமான நடவடிக்கைகளில் ஈடுபடும் தகவல்கள் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...