நவராத்திரி ஸ்பெசல்: ஜூவெல் ஒன் வழங்கும் 'பேசும் பொம்மைகள்'

கோவை: நவராத்திரியை முன்னிட்டு ஜூவெல் ஒன் நிறுவனம் சார்பில் அக்டோபர் 10 முதல் 18 வரை மாலை 5.30 முதல் 8.30 வரை ப்ரோஸோன் மாலில் நிகழ்ச்சி நடைபெறுகிறது.


கோவை: நவராத்திரியை முன்னிட்டு ஜூவெல் ஒன் நிறுவனம் சார்பில் அக்டோபர் 10 முதல் 18 வரை மாலை 5.30 முதல் 8.30 வரை ப்ரோஸோன் மாலில் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இது குறித்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது:-

 'அழகு ' என்ற தன்மை எந்த விளக்கங்களுக்குள்ளும் கட்டமைப்புகளுக்குள்ளும் அடங்காது எனும் கருத்தை வலியுறுத்தும் விதமாக கொண்டாடவிருக்கும் இந்நிகழ்வில் திருநங்கைகள், ஆதரவற்ற குழந்தைகள் ,மாற்றுத் திறனாளிகள், பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளவர்கள் ஆகியோர் பங்கு கொள்ளும் கலை நிகழ்ச்சிகள் நடத்தவுள்ளன.

மேலும் இந்நிகழ்வை சிறப்பிக்க , பிரபல பாடகர் கானா பாலா, சூப்பர் சிங்கர் புகழ் ரக்ஷிதா சுரேஷ் , பத்மஸ்ரீ விருது பெற்ற பக்தவத்சலம் இவர்களுடன், கோவை மாநகராட்சி ஆணையர் விஜய் கார்த்திகேயன் அவர்களும் கலந்து கொள்ள உள்ளனர். 

 

அக்டோபர் 06 சனிக்கிழமை நடந்த இதன் தொடக்க விழாவில் இந்நிகழ்வை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் , சமூக வலைதளங்களில் பகிர்வதற்கும் ஏதுவாக , " தம்ஸ் அப் " வடிவத்தில் பலர் கூடி நின்று புகைப்படங்கள் எடுத்து தங்களின் ஆதரவை தெரிவித்தனர்.



ஜூவெல் ஒன் இயக்குனர் நிஷ்டா இது குறித்து கூறும்போது,

"பொதுவாக வீடுகளில் நவராத்தியின் போது கொலு வைப்பார்கள். நண்பர்களை கூப்பிட்டு பெரிய கொலுவாக அமைக்க வேண்டும் என்று சொல்வார்கள். நாம் சமூகத்தையே அழைத்து அனைவருக்கும் உதவும் விதமாக அரசுப்பள்ளிக் குழந்தைகள் தொடங்கி திருநங்கைகள், ஆதரவற்ற குழந்தைகள் , மன நலக்குறைபாடு மற்றும் உடல் மாற்றுதிறன் கொண்ட குழந்தைகள் என அனைவரையும் மகிழ்வித்து உற்சாகப்படுத்தும் விதமாக அவர்களுக்கான கலை நிகழ்ச்சிகளை ''பேசும் பொம்மைகள்" என்ற தலைப்பின் கீழ் நடத்துகிறோம். சந்தர்ப்பங்கள் மறுக்கப்படும் அவர்களுக்கு நல்ல மேடையை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்வை ஒருங்கிணைத்திருக்கிறோம்.

அவர்களின் மகிழ்ச்சியே எங்களின் பிரதானக் குறிக்கோள். கானா பாலா முதலிய பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு ஆதரவு தெரிவிக்கின்றனர். மக்கள் ஆதரவைத் தெரிவிக்கும் விதமாக ''தம்ஸ் அப்" வடிவில் நூற்றுக்கணக்கானோர் நின்று பங்களித்தது மகிழ்ச்சியை அளித்தது. ஒன்பது நாட்கள் நடக்கும் இந்நிகழ்ச்சியில் பங்கு கொண்டு சமுதாயத்தில் ஒதுங்கி இருக்கும் அவர்களுக்கு ஒரு புதிய முயற்சியில் நாமும் பங்கெடுத்துக் கொள்வோம் என்று அனைவரையும் அழைக்கிறேன்." என்றார்

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...