ரெட் அலர்ட் குறித்து எச்சரிக்கை அவசியம், பயம் தேவையில்லை : வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம்

கோவை : கோவையைப் பொறுத்தவரையில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்றும், ரெட் அலர்ட் குறித்து எச்சரிக்கை மட்டுமே அவசியம் தவிர பயப்படத் தேவையில்லை என தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.


கோவை : கோவையைப் பொறுத்தவரையில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்றும், ரெட் அலர்ட் குறித்து எச்சரிக்கை மட்டுமே அவசியம் தவிர பயப்படத் தேவையில்லை என தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது :- கோவை, நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பரவலான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவையைப் பொறுத்தவரை அடுத்த 3 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரம் வெப்ப நிலையைப் பொறுத்தவரையில் 31.5 அதிகபட்சமாக பதிவாகக்கூடும் இரவு நேரத்தில் 21 முதல் 22 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளது. அதே சமயம், காற்றின் வேகம் 10 கி.மீ. முதல் 12 கி.மீ. வரை வீசக்கூடும். 

ரெட் அலர்ட் என சொல்லக்கூடிய 7-ம் தேதி கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் அதிக அளவு மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதாவது 90 மி.மீ வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. காரமடையில் 80 மி.மீட்டரும், சர்க்கார் சமாக்குளத்தில் 40 மி.மீட்டரும், பெரியநாயக்கன்பாளையத்தில் 41 மிமீ, மதுக்கரையில் 25 மி.மீட்டரும், ஆனைமலை, பொள்ளாச்சி மற்றும் வால்பாறை பகுதிகளில் 25 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல, அன்னூர், கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் தூரல் மழை பெய்யும்.

அடுத்த மூன்று நாட்களில் கோவையில் 110 மி.மீட்டரும், நீலகிரியில் 110 மி.மீட்டரும், திருப்பூரில் 70 மி.மீட்டரும், ஈரோட்டில் 100 மி.மீட்டர் மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. எனவே, ரெட் அலர்ட் குறித்து மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம், பயப்படத் தேவையில்லை.

விவசாயிகள் நீர் பாய்ச்ச வேண்டாம். பூச்சி மருத்துகள் அடிக்க வேண்டாம். வடிகால்களை சீர்செய்து வைத்துக் கொள்ள வேண்டும். வாழை மரங்களுக்கு முட்டு கொடுக்க வேண்டும். கரும்புகளுக்கு விட்டம் கட்ட வேண்டும். கடலோர மாவட்டங்களான நாகப்பட்டினம், தூத்துக்குடி, சென்னை, காஞ்சிபுரம், கடலூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு மழை பெய்ய வாய்ப்புள்ளது, என்றார்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...