பெற்றோர் இல்லாத மாணவர்களுக்கு பயணம் இலவசம்: கோவையை கலக்கும் தனியார் பேருந்தின் அறிவிப்பு

கோவை: கோவை மாநகர் பகுதியில் இயங்கி வரும் விஜய் டிரான்ஸ்போர்ட் என்கிற தனியார் பேருந்து பள்ளி மாணவர்களுக்கு பல சலுகைகளை அறிவித்துள்ளது. இது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

கோவை: கோவை மாநகர் பகுதியில் இயங்கி வரும் விஜய் டிரான்ஸ்போர்ட் என்கிற தனியார் பேருந்து பள்ளி மாணவர்களுக்கு பல சலுகைகளை அறிவித்துள்ளது. இது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

1C ஒண்டிப்புதுார் - வடவள்ளி ஒரு பேருந்து, S1 ஒண்டிப்புதுார் - மணியகாரம்பாளையம் இரண்டு பேருந்துகள், 7a காந்திபார்க் - காந்திபார்க் ஒரு பேருந்து, S9 ஒண்டிப்புதூர் - உடையாம்பாளையம் என்கிற வழித்தடங்களில் விஜய் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் 5 பேருந்துகளை இயக்கி வருகிறது. 

இந்த பேருந்துகளில் செல்லும் பள்ளி மாணவர்கள், 5 ரூபாய் கட்டணம் செலுத்தினால் போதுமானது. பெற்றோர் இல்லாத மாணவர்களுக்கு இலவசம். இதற்கு அடையாள அட்டை அல்லது பஸ் பாஸ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை காண்பிக்க வேண்டும். பள்ளி சீருடையில் இருந்தால் அதுவும் தேவையில்லை. பெற்றோரை இழந்த மாணவர்கள், தலைமை ஆசிரியரிடம் பெற்ற கடிதத்தைக் காண்பித்து இலவசமாக பயணிக்கலாம்.



இது குறித்து விஜய் டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் கிஷோர் கூறுகையில், ''இந்த சலுகைகள் பல ஆண்டுகளாக உள்ளது. தற்போது அனைவரும் பயன்பெற வேண்டும் என்பதற்காக பேருந்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. பெற்றோரை இழந்த மாணவர்கள் படிப்பதே சிரமம் என்பதால், அவர்கள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

மீதமுள்ள மாணவர்களிடம் எங்கு ஏறி எங்கு இறங்கினாலும் ரூ.5 மட்டுமே. எங்கள் நிறுவனத்தின் கீழ் இயங்கும், ஐந்து பேருந்துகளிலும் பள்ளி மாணவர்களுக்கு இச்சலுகை உண்டு. கடந்த 50 ஆண்டுகளாக எங்கள் நிறுவனம் இயங்கிவருகிறது. இதன் ஆதரவைப் பொறுத்து மேலும் பல சலுகைகள் வழங்க திட்டமிட்டுள்ளோம்.'' என்றார்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...