கலப்படமற்ற பருத்தி கிடைக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கும் 'சைமா'

கோவை: கலப்படமற்ற சுத்தமான பருத்தி கிடைக்க மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தலையிட வேண்டும் என்று தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா-SIMA) தென்னிந்திய அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

கோவை: கலப்படமற்ற சுத்தமான பருத்தி கிடைக்க மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தலையிட வேண்டும் என்று தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா-SIMA) தென்னிந்திய அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.



இது தொடர்பாக சைமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பருத்தி தொழில்நுட்ப குழுவை மீண்டும் புதிய வடிவத்தில் இரண்டு குழுக்களாக பிரித்து ஒன்றை தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் மற்றொன்றை தொழில் நுட்ப பரிமாற்றத்திற்கும் மத்திய விவசாய அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று கோரி வருகிறது.

மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் ஒரு திட்டத்தை தயாரித்து அரசிடம் சமர்ப்பித்துள்ளது. அந்த திட்டத்தின் நோக்கம் சுத்தமான பருத்தியை வழங்க ஏற்பாடு செய்வது மற்றும் இந்திய பருத்தி ஜவுளிப் பொருட்களுக்கு உலக அளவில் முத்திரை பெறுவதாகும்.

ஜின்னிங் ஆலைகள் பின்பற்றும் தவறான முறைகளால் இந்தியா மோசமான பருத்தியை உற்பத்தி செய்யும் நாடுகளில் முதல் இடத்தை பிடித்துள்ளதாக சர்வதேச ஜவுளி உற்பத்தியாளர் கூட்டமைப்பு தனது ஆய்வில் கூறியுள்ளது.

பருத்தியுடன் தரமற்ற பருத்தியை கலந்தும், எடையை கூட்ட தண்ணீரையும் சேர்க்கின்றனர். இது குறித்து தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் தலைவர் நடராஜ் கூறுகையில், மத்திய அமைச்சர் இந்த விவகாரத்தில் தலையிட்டு ஜின்னிங் ஆலைகள் செய்யும் கலப்பட முறைகேடுகளை தடுக்க வேண்டும். இந்திய பருத்தி கழகத்திற்கு அதிகாரம் வழங்கி கலப்படத்தை தடுக்க வேண்டும்." என்றார்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...