தி.மு.க ஆட்சிக்கு வரும் போது அ.தி.மு.க அமைச்சர்கள் சிறையில் இருப்பார்கள் : கோவையில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

கோவை: தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும் எனவும் அப்போது அ.தி.மு.க அமைச்சர்கள் சிறையில் இருப்பார்கள் எனவும் கோவை மாவட்டம் பனப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற தி.மு.க பொதுக்கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.


கோவை: தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும் எனவும் அப்போது அ.தி.மு.க அமைச்சர்கள் சிறையில் இருப்பார்கள் எனவும் கோவை மாவட்டம் பனப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற தி.மு.க பொதுக்கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

கிணத்துக்கடவு அருகே உள்ள பனப்பட்டி கிராமத்தில் அ.தி.மு.க அரசின் ஊழலை மக்களிடம் விளக்கும் விதமாக தி.மு.க சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர் மு.கண்ணப்பன்,

உதயநிதி ஸ்டாலின், மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.



உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்த நிர்வாகிகளிடம் மேடையில் இருப்பது பெருமையல்ல, கீழே தொண்டர்களுடன் அமர்ந்து கொள்கின்றேன் என்று கூறினேன். ஆனால், என்னை கட்டாயப்படுத்தி மேடையில் ஏற்றியிருக்கின்றனர். மேடையில் இருப்பதால் தொண்டர்களை பார்க்க முடிகின்றது.

இங்கு பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. நீதிமன்றம் சென்று போராடித்தான் இந்த பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வாங்கி இருக்கின்றோம். போராடித்தான் கலைஞருக்கு மெரீனாவில் இடம் வாங்கினோம். பொதுக்கூட்டம் நடத்தவும் போராடித்தான் அனுமதி வாங்கியுள்ளோம்.

தி.மு.க என்றாலே போராட்டம் தான். தி.மு.க.,விற்காக உழைத்த கட்சியின் முன்னோடிகளுக்கு எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன். தற்போது ஜெயலலிதா உயிரோடு இருந்தால் பெங்களூர் சிறையில் தான் இருந்திருப்பார்.

தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும். அப்போது அ.தி.மு.க அமைச்சர்கள் சிறையில் இருப்பார்கள். அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அல்ல அவர் எஸ்.பி.ஊழல்மணி. தமிழகத்தில் மக்கள் நிம்மதியாக இல்லை என்பதால் தான் போராடுகின்றனர். இது தெரியாமல் அதிக போராட்டம் இங்குதான் நடக்கின்றது என முதல்வர் பெருமையாக சொல்கின்றார்.

உழைப்பால் உயர்ந்தவர் தலைவர் ஸ்டாலின். ஸ்டாலின் குறுக்கு வழியில் வந்து விட்டதாக சசிகலா காலில் விழுந்து முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி சொல்கின்றார். ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக உதயநிதி வரிசையில் வந்து விட்டார் என எடப்பாடி பழனிச்சாமி சொல்கின்றார். ஆமாம் நான் வரிசையில் கடைசியில் நிற்கின்றேன். தி.மு.க தொண்டர்களுடன் தோள்கொடுத்து நிற்கின்றேன்." என்றார்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...