கோவை நீதிமன்றத்தில் வழக்கு விபரங்களை அறிந்துகொள்ள தொடுதிரை கருவி அமைப்பு

கோவை: வழக்கு விபரங்களை நீதிமன்றங்களுக்குள் சென்று பார்ப்பதைத் தவிர்க்கும் பொருட்டு, வழக்காளிகளுக்காக கோவை நீதிமன்ற வளாகத்தில் வழக்கு விபரங்கள் அடங்கிய தொடுதிரை இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.


கோவை: வழக்கு விபரங்களை நீதிமன்றங்களுக்குள் சென்று பார்ப்பதைத் தவிர்க்கும் பொருட்டு, வழக்காளிகளுக்காக கோவை நீதிமன்ற வளாகத்தில் வழக்கு விபரங்கள் அடங்கிய தொடுதிரை இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.

பொதுவாக நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் விபரங்களை வழக்காளிகள் அவ்வப்போது சம்பந்தப்பட்ட  நீதிமன்றங்களுக்கு சென்றே அறிந்து கொள்ள வேண்டும். இதனிடையே வழக்கு விபரங்கள் அண்மையில் இணையதளம் மூலம் வெளியிடப்பட்டது.



இந்த முறையில் வழக்கு விபரங்கள் மறுநாளே பதிவேற்றம்ம் செய்யப்பட்டு வந்தன. இந்த நிலையில் கோவை நீதிமன்ற வளாகத்தில் வழக்கின் நிலை குறித்த தகவல்களை உடனடியாக தெரிந்து கொள்ளும் வகையில் தொடுதிரை இயந்திரம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அதன் செயல்பாட்டை துவக்கி வைத்த கோவை மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி சக்திவேல் வழக்காளிகள் பயன்பெறும் வகையில் இந்த தொடுதிரை அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அவர்களது நேரம் விரயமாகுதல் தவிர்க்கப்படும் என்றும் கூறினார்.



இந்த தொடுதிரை இயந்திரத்தில் வழக்குகளின் விபரங்கள் மட்டுமின்றி, தீர்ப்பாகும் வழக்குகள் குறித்த விபரமும் தீர்ப்பின் விபரமும் நீதிமன்றத்தில் நடைபெறும் அதே வேளையில் பதிவேற்றம் செய்யப்பட்டு அதனை வழக்காளிகள் காணலாம் என்றும் குறிப்பிட்டார்.

கோவை நீதிமன்றத்தில் இரண்டு தொடுதிரை இயந்திரங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டு முதற்கட்டமாக ஒரு தொடுதிரை துவக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் மற்றொரு தொடுதிரை அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...