காமராஜரின் நினைவுநாளையொட்டி மாணவர்களுக்கு அரசு பள்ளியில் இலவச காலை உணவு விநியோகம்

கோவை : முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் நினைவு நாளையொட்டி உருமாண்டபாளையம் அரசு பள்ளியின் சார்பில் மாணவர்களுக்கு இலவச காலை உணவு வழங்கப்பட்டது.

கோவை : முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் நினைவு நாளையொட்டி உருமாண்டபாளையம் அரசு பள்ளியின் சார்பில் மாணவர்களுக்கு இலவச காலை உணவு வழங்கப்பட்டது. 

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதேவேளையில், கல்விக் கண் திறந்தவர் என்ற பெருமையைக் கொண்ட முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இவரது ஆட்சி காலத்தில் ஏழை மாணவர்களின் கல்வி கனவை நினைவாக்கும் வகையில், இலவச மதிய உணவு திட்டம் கொண்டு வரப்பட்டது. 

இந்த நிலையில், கோவை மாவட்டம் துடியலூர் அருகே உள்ள உருமாண்டம்பாளையம் அரசு பள்ளியின் சார்பில் மாணவர்களுக்கு இலவச காலை உணவு வழங்கப்பட்டது. தமிழகத்திலேயே முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் வெற்றி திட்டமான மதிய உணவுத் திட்டத்தை, போற்றும் வகையில் இலவச உணவு வழங்கிய பள்ளி என்ற பெருமையை இந்தப் பள்ளி பெற்றுள்ளது. 



இந்தப் பள்ளியில் அனைத்து அடிப்படை வசதிகளும் இருந்தும் மாணவர்கள் சேர்க்கை பின்னடைவாகவே உள்ளது. வெறும் 60 மாணவர்களுக்கு இரு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். 

முன்னாள் மானவர்கள், குடியிருப்புவாசிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் இணைந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. அதோடு, திருவள்ளூர் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு, புத்தகங்களும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யு.ஆர். கிருஷ்ணன், வின்னர் இந்தியா சி.கே. கிருஷ்ணன், ஏ.குமாரசாமி, யு.கே. பாபு, ஆடிட்டர் ஜி. ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். 

நாடு வளமுடன் இருக்க மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் கைகோர்த்துள்ளன. 

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...