மின்சாரம் பாய்ந்து ஒப்பந்த தொழிலாளி பலி : மேலும் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

கரூர் : உயர்மின் அழுத்தம் தொடர்பான பணியில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் பாய்ந்ததில் ஒப்பந்த தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கரூர் : உயர்மின் அழுத்தம் தொடர்பான பணியில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் பாய்ந்ததில் ஒப்பந்த தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



கரூர் மாவட்டம் புரவிபாளையத்தை சேர்ந்தவர் கே. செந்தில்குமார் (38). மின்சார வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளராக பணிபுரிந்து வரும் இவர், நேற்று மாலை க.பரமத்தி அருகே பவித்திரம் கீழ்புறம் பகுதியில் உயிர்மின் அழுத்தம் தொடர்பான பணியில் ஈடுபட்டிருந்தார். 

அப்போது, மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். அவருடன் பணியில் ஈடுபட்டிருந்த மற்றொரு தொழிலாளியான காளிமுத்து (45) என்பவர் காயங்களுடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



இச்சம்பவம் மின்வாரிய அதிகாரிகளின் அலட்சத்தியத்தால் தான் நடைபெற்றுள்ளது என தமிழ்நாடு மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. 

இது குறித்து அச்சங்கத்தின் கோவை மண்டல செயலாளர் நாகராஜ் கூறுகையில், "இதற்கு காரணமான அதிகாரியை தண்டிக்க வேண்டும். இறந்த ஒப்பந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்க வேண்டும். அதேபோல, அரசு தரப்பில் உயிரிழந்தவரின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இதுவரை மின்வாரிய உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. அவர்கள் வரும் வரை கே. செந்தில்குமாரின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்," என்றார்.



Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...