கனமழையால் அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு : விவசாயிகள் மகிழ்ச்சி

திருப்பூர்: அமராவதி அணை பகுதியில் நேற்று பெய்த கன மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

திருப்பூர்: அமராவதி அணை பகுதியில் நேற்று பெய்த கன மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை 90 அடி கொள்ளளவு கொண்டது. கடந்த ஒரு வாரமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான அமராவதி அணை பகுதியில் பெய்து வரும் கன மழையால் நீர்மட்டம் விரைவாக அதிகரித்து வருகின்றது. கேரளா மாநிலம் மூணாறு, மறையூா், சின்னாறு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதும் அணைக்கு நீர்வரத்து அதிகாரிக்க காரணமாக உள்ளது.



உடுமலை மடத்துக்குளம் தாராபுரம் பகுதி விவசாயிகள் தற்போது முதல்போக நெல் நடவு செய்து, இன்னும் 2 மாதங்களில் அறுவடை செய்யவுள்ள நிலையில் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து வந்து கொண்டிருப்பதால் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  தொடர்ந்து அணையின் நீர்மட்டம் குறையாமல், வருகின்ற நீர்வரத்தை அப்படியே விவசாயத்திற்குப் பயன்படுத்தினால் இரண்டாம் போகமும் நெல் சாகுபடி செய்ய தேவையான அளவு தண்ணீர் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.



தற்போது அணையில் 77.27 அடி நீர்மட்டம் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 581 கன அடி நீர்வரத்து உள்ள நிலையில் விவசாயத்திற்காக அமராவதி ஆற்றில் 609 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...