உதகையில் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் தூய்மை ரத வாகன யாத்திரை தொடக்கம்

உதகையில் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் தூய்மை ரத வாகன யாத்திரை தொடக்கம்

நீலகிரி : மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக மாவட்ட மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தூய்மை ரத வாகன யாத்திரை இன்று தொடங்கியது.

தமிழக அரசின் முதன்மைசெயலரும், உணவு பாதுகாப்புத் துறை ஆணையருமான அமுதா உதகை காந்தல் பகுதியில் தூய்மை ரத வாகன இயக்கத்தை தொடங்கி வைத்தார். மாவட்டத்திலுள்ள 35 ஊராட்சிகளுக்கு செல்லும் இந்த தூய்மை ரதம், வரும் 2-ந் தேதி வரை தூய்மை இந்தியா திட்டத்தின் பயன்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்று மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறினார். 



இதைதொடர்ந்து, செய்தியாளர்களிடம் உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் அமுதா பேசியதாவது :- தமிழகம் பல்வேறு துறைகளில் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வதிலும் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது. இதிலும், குறிப்பாக, நீலகிரி மாவட்டம் தமிழகத்தில் பிளாஸ்டிக் இல்லாத முன் மாதிரி மாவட்டமாக இருக்கிறது. நாகரீகம் என்ற பெயரில் கடந்த 25 ஆண்டுகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. 

வரும் 2019 ஜனவரி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளதையடுத்து, அதற்குப் பதிலாக மக்காச்சோளக் கழிவு, மரவள்ளி கிழங்குக் கழிவு, கரும்பு சக்கையிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மாற்றுப் பொருட்களை வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்த முன் வர வேண்டும், என்றார். 

மேலும், மாநிலத்தில் ஆங்காங்கே தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வது குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், "தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்கப்படுவது, பதுக்கி வைப்பது குறித்த தகவல் கிடைத்தால் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும்," எனக் கூறினார். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...