கனமழையால் நீலகிரி மலை ரயில் தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை மூன்று மணி நேரம் பாதிப்பு

கோவை: நேற்றிரவு மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால், மலை ரயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக மலை ரயில் போக்குவரத்து சுமார் மூன்று பாதிக்கப்பட்டது.

கோவை:  நேற்றிரவு மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால், மலை ரயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக மலை ரயில் போக்குவரத்து சுமார் மூன்று பாதிக்கப்பட்டது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினசரி மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இம்மலை ரயிலில் பயணித்தபடி நீலகிரி மலையின் இயற்கை எழிலைக் கண்டு ரசிக்க உள்நாட்டில் இருந்து மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.



இந்நிலையில், இன்று காலை 7.10 மணிக்கு வழக்கம் போல் சுற்றுலாப் பயணிகளோடு மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து நீலகிரி மலை ரயில் புறப்பட்டு கல்லார் ரயில்நிலையத்தை அடைந்த போது அதன் தண்டவாளப் பாதையில் மூன்று இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது.

இப்பகுதிகளில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக மலை மீது இருந்து சிறு சிறு பாறைகளோடு மண் சரிவு ஏற்பட்ட காரணத்தினால் இருப்புப் பாதைகளை மண் மூடியது. இதனால், மலை ரயில் கல்லார் ரயில்நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது. 



தொடர்ந்து, இருபதிற்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் கல்லார் மற்றும் ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கிடையே ஏற்பட்டிருந்த மண் சரிவுகளை அகற்றி சீர்செய்யும் பணியில் ஈடுபட்டனர். சுமார் இரண்டரை மணி நேரத்திற்கு பின்னர் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் மூன்று மணிநேரம் தாமதமாக மீண்டும் கல்லார் ரயில்நிலையத்தில் மலை ரயில் இருந்து புறப்பட்டு சென்றது.

மூன்று மணிநேரத்திற்கும் மேலாக நடுவழியில் மலை ரயில் நிறுத்தப்பட்டு தாமதமாக புறப்பட்டு சென்றதால் சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...