கோவையில் மது போதையில் தகராறில் ஈடுபட்டவர்களை எச்சரித்த காவலருக்கு கத்திக்குத்து

கோவை: அன்னூர் காவல் நிலைய காவலராக பணியாற்றும் வெங்கடேஷ் என்பவரை கத்தியால் குத்திய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை: அன்னூர் காவல் நிலைய காவலராக பணியாற்றும் வெங்கடேஷ் என்பவரை கத்தியால் குத்திய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

அன்னூர் காவல் நிலைய காவலராக பணியாற்றி வருபவர் வெங்கடேஷ்(34). இவர் நேற்று பெரியநாயக்கன்பாளையம் சாந்திமேடு அருகே மது போதையில் தகராறில் ஈடுபட்டவர்களை எச்சரித்து களைந்து போக அறிவுறுத்தியுள்ளார். 



அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர்கள் தனியாக சென்ற காவலர் வெங்கடேசை மறித்து கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

தொடர்ந்து அப்பகுதி மக்கள் அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை மேற்கொண்டதில் உயிருக்கு ஆபத்து இல்லை என தெரியவந்தது. இதையடுத்து சிகிச்சைக்கு பின்னர் வெங்கடேஷ் வீடு திரும்பிவிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள பெரியநாயக்கன்பாளையம் போலீசார் காவலர் வெங்கடேசை தாக்கிய நபர்களை தேடி வருகின்றனர். பொதுமக்களை பாதுகாக்க கூடிய காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...