சாதி ஆணவ படுகொலைகளைக் கண்டித்து கோவையில் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

கோவை : தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு சாதி ஆணவ படுகொலைகளைக் கண்டித்து பல்வேறு அமைப்பினர் ஒருங்கிணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


கோவை : தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு சாதி ஆணவ படுகொலைகளைக் கண்டித்து பல்வேறு அமைப்பினர் ஒருங்கிணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தெலுங்கனா மாநிலத்தில் காதல் திருமணம் செய்த பிரணாய் என்ற இளைஞர் படுகொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, நாட்டை உலுக்கும் வகையில் மேலும் ஒரு சம்பவமும் நடைபெற்றது. இந்த நிலையில், தொடர்ச்சியாக நடைபெறும் சாதி ஆணவ படுகொலைகளை கண்டித்து கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம், தந்தை பெரியார் திராவிடர் கழகம்,விடுதலை சிறுத்தைகள் கட்சி,மக்கள் சிவில் உரிமை கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். 

ஆர்ப்பாட்டத்தின் போது பிரணாய் மரணத்திற்கு நீதி கேட்டு முழக்கங்களை எழுப்பினர். சாதி ஆணவ படுகொலைகள் சட்டத்திற்கும், சமூக நீதிக்கும் எதிரானது எனவும், சாதி ஆணவ படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டுமெனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...