குறிச்சி, குனியமுத்தூர் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்கான நிறுவனம் தேர்வு

கோவை: கோவை மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளான குறிச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதிகளில் ரூ. 577.54 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளவிருக்கும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்கான நிறுவனம் ஒப்பந்தம் முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

கோவை: கோவை மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளான குறிச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதிகளில் ரூ. 577.54 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளவிருக்கும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்கான நிறுவனம் ஒப்பந்தம் முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் நிதி பெறப்பட்டு, நகரில் மூன்று கட்டங்களாக பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2011-ம் ஆண்டு மாநகராட்சியின் எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டபோது, இணைக்கப்பட்ட 11 உள்ளாட்சி அமைப்புகள், 40 வார்டுகளாக ஒருங்கிணைக்கப்பட்டு மாநகராட்சி வார்டுகளின் எண்ணிக்கை 100-ஆக உயர்த்தப்பட்டது.

முதற்கட்டமாக, இணைக்கப்பட்ட பகுதிகளான குறிச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. மேலும், அதற்கான தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் திட்டஅறிக்கை தயாரிக்கப்பட்டது. குறிச்சி மற்றும் குனியமுத்தூர் (வார்டு எண். 87 முதல் 100 வரை) பகுதியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்தை தேர்வு செய்ய கடந்த ஏப்ரல் மாதம் டெண்டர் நடத்தப்பட்டது. அதில், சென்னையை சேர்ந்த எல்&டி நிறுவனம் டெண்டர் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘‘குறிச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதியில் ரூ. 577.54 கோடி மதிப்பீட்டில் 429 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக, சென்னையை சேர்ந்த எல்&டி நிறுவனம் டெண்டர் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இப்பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும். திட்டம் தொடங்கப்பட்டு 42 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது," என்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...