கோவையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தில் கோடிக்கணக்கில் பணம் கையாடல் : கணக்காளரிடம் போலீசார் விசாரணை

கோவை: கோவையில் உள்ள டிராபிகானா நிட்டிங் என்ற நிறுவனத்தில் பணிபுரியும் கணக்காளர் தனது நிறுவனத்தில் இருந்து கோடிக்கணக்கான ரூபாயை கையாடல் செய்துள்ள சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை: கோவையில் உள்ள டிராபிகானா நிட்டிங் என்ற நிறுவனத்தில் பணிபுரியும் கணக்காளர் தனது நிறுவனத்தில் இருந்து கோடிக்கணக்கான ரூபாயை கையாடல் செய்துள்ள சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

துடியலூரில் டிராபிகானா நிட்டிங் என்ற தனியார் பனியன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு இருகூரைச் சேர்ந்த உதயநிதி (31), என்பவர் கணக்காளராக பணியாற்றி வந்தார். இவர் ரெடிமேடு உற்பத்திக்காக மூலப்பொருள்கள் வாங்கியதற்கு பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு இந்த தொழிற்சாலை சார்பில் வங்கிகள் மூலம் பணம் அனுப்பும் பொறுப்பை கவனித்து வந்தார். 

அப்போது அவர் பனியன் தொழிற்சாலைக்கு சொந்தமான சுமார் ஒரு கோடியே ஒரு லட்சத்தை தனது வங்கி கணக்கிலும், உறவினர்களின் வங்கிக் கணக்கிலும் சேர்த்து கையாடல் செய்ததாக புகார் எழுந்தது.

இந்த மோசடி குறித்து கணக்காளர் மீது பனியன் தொழிற்சாலை அதிகாரி சக்தி கோவை மாவட்ட குற்றப் பிரிவு போலீசில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்து கணக்காளர் உதயநிதியிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இவரது மோசடி குற்றத்திற்கு துணை இருந்தவர்களையும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...