மண்பானை மீது நடனமாடி ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த பரத நாட்டிய கலைஞர்கள்

திருப்பூர் : அவிநாசி அருகே 310 பரத நாட்டிய கலைஞர்கள் ஒரே நேரத்தில் மண்பானை மீது நடனமாடி ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து அசத்தினர்.


திருப்பூர் : அவிநாசி அருகே 310 பரத நாட்டிய கலைஞர்கள் ஒரே நேரத்தில் மண்பானை மீது நடனமாடி ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து அசத்தினர்.



ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பெறும் நிகழ்விற்காக அவிநாசியில் 321 பரதநாட்டிய கலைஞர்கள் பங்குபெற்ற ஸ்ரீ நடராஜப் பெருமானை வேண்டி வலியுறுத்தி மண்பானை மீது நாட்டியமாடும் நிகழ்ச்சி அவிநாசியில் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது. ஸ்ரீ பிருந்தாவன் கலாச்சேத்ராவின் சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பள்ளி மாணவ, மாணவிகள், குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 321 பரதநாட்டிய கலைஞர்கள் கலந்து கொண்டு பானை ஏறி நின்று மீது நடனமாடினர். 



ஐந்து நிமிடங்கள் மண்பானை மீது நடனமாடி தங்களது கலைத்திறனை வெளிப்படுத்தினர். இதில், 310 பரத நாட்டிய கலைஞர்களின் நாட்டியம் ஆசிய சாதனை புத்தக நிர்வாகியால் அங்கீகரிக்கப்பட்டது. இதனால், கடந்த 2009-ம் ஆண்டு ஐதராபாத்தில் 50 பேர் மண்பானை மீது பரத நாட்டியமாடி ஆசிய சாதனை முறியடிக்கப்பட்டு, புதிய சாதனை நிகழ்த்தப்பட்டதாக ஆசிய சாதனை புத்தக நிர்வாகியால் அறிவிக்கப்பட்டது. இந்த சாதனை நிகழ்ச்சியைப் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் இந்நிகழ்ச்சியைக் கண்டுகளித்தனர்.



Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...