மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் புள்ளி மானை வேட்டையாடிய 5 பேர் கைது

கோவை : மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கிகளை பயன்படுத்தி புள்ளி மானை வேட்டையாடிய 5 பேரை பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் கைது செய்தனர்.

கோவை : மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கிகளை பயன்படுத்தி புள்ளி மானை வேட்டையாடிய 5 பேரை பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் கைது செய்தனர். 

கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பாலமலை, மாங்கரை, ஆனைகட்டி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் யானை, மான், கரடி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இப்பகுதிகளில், அவ்வப்போது சில சமூக விரோதிகள் மான்களை வேட்டையாடி வருவதாக பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகர் சுரேஷ் தலைமையில் வனத்துறையினர் இரவு ரோந்து பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், நேற்று மாலை 5 மணியளவில் பொன்மலை வனப்பகுதியினை ஒட்டிய பகுதியில் 2 இருசக்கர வாகனத்தில் வந்த ஐந்து பேரை பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர்கள் பெரியநாயக்கன்பாளையம் வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கியினை பயன்படுத்தி ஆண் புள்ளி மானை வேட்டையாடி, எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, மானை வேட்டையாடிய காரமடை நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த அருள், துரை, கிருஷ்ணன், வேலுச்சாமி, சுரேஷ் ஆகிய 5 பேரை வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட 5 பேரிடம் இருந்து சுமார் மூன்று வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளி மானின் உடல் மற்றும் இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள், பேட்டரிகள், துப்பாக்கி குண்டுகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர், ஜந்து பேரும் மேட்டுப்பாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...