கோவையில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை முயற்சி : மகன் பலி

கோவை : ஆவாரம்பாளையம் பகுதியில் கடன் தொல்லையின் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவத்தில் மகன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கோவை : ஆவாரம்பாளையம் பகுதியில் கடன் தொல்லையின் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவத்தில் மகன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

ஆவாரம்பாளையம் இளங்கோ நகர் முதலாவது வீதியில் வசித்து வருபவர் நாகராஜ் (45). இவர், கடந்த சில வருடங்களாக தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி தேன்மொழி (42). இந்த தம்பதிகளுக்கு ஆனந்தகுமார் (27) என்ற மகனும், சௌந்தர்யா என்ற மகளும் உள்ளனர். இதில், நகராஜின் வாரிசுகளுக்கு திருமணம் ஆன நிலையில், தந்தை நாகராஜ் மகன் ஆனந்த் குமார் உதவியுடன் பழ வியாபாரம் செய்து வந்தார். இதைத்தொடர்ந்து நேற்று விடுமுறை தினம் என்பதால் தந்தையும், மகனும், தாயும் வியாபாரத்திற்கு செல்லாமல் வீட்டில் இருந்தனர். 

இந்த நிலையில், கணவர் வீட்டில் வசித்து வரும் மகள் சவுந்தர்யா தனது சகோதரரின் செல்போனுக்கு அழைத்துள்ளார். ஆனால், பலமுறை அழைத்தும் தொலைபேசி அழைப்பை வீட்டில் யாரும் எடுக்காததால், சந்தேகம் அடைந்த அவர் நேரடியாக வீட்டிற்கு வந்தார். அப்போது, வீட்டில் மயங்கிய நிலையில், பெற்றோர்களும் சகோதரரும் இருப்பதைக் கண்ட சௌந்தர்யா அக்கம்பக்கத்தினர் மூலம் ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தார். பின்னர், வந்த ஆம்புலன்ஸ் மூலம் மூன்று பேரையும் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 

இவர்கள் மூன்று பேரையும் மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவர், ஆனந்த் குமார் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மற்ற இரண்டு பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த தற்கொலை சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் நடத்திய விசாரணையில் கடன் தொல்லையால் இவர்கள் தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்துள்ளது.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...