நீலகிரிக்கு சுற்றுலா சென்ற போது கார் எரிந்து விபத்து

நீலகிரி: கோத்தகிரி அருகே உள்ள தட்டப்பள்ளம் பகுதியில் சுற்றுலா வந்த வாகனம் எரிந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக நான்கு பேர் உயிர் தப்பினர்.

நீலகிரி: கோத்தகிரி அருகே உள்ள தட்டப்பள்ளம் பகுதியில் சுற்றுலா வந்த வாகனம் எரிந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக நான்கு பேர் உயிர் தப்பினர்.

கோவை பேரூரைச் சேர்ந்தவர் கருப்பசாமி-ராமலதா தம்பதியினர். இவர்கள் தங்களது இரண்டு குழந்தைகளுடன் நீலகிரிக்கு காரில் சுற்றுலா சென்றனர். அவர்களது கார் கோத்தகிரி தட்டப்பள்ளம் அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென காரில் இருந்து புகை வெளிவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து காரில் இருந்து இறங்கிய கருப்பசாமி, பானட்டை திறந்து பார்த்தார். அப்போது தீ மளமளவென எரியத் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து வாகனத்தில் இருந்த ராமலதா மற்றும் குழந்தைகள் காரில் இருந்து உடனடியாக இறக்கப்பட்டனர்.

இது குறித்து தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலைத் தொடர்ந்து அங்கு சென்ற தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...