கருணாநிதி, கனிமொழி குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பதிவு : எச். ராஜா மீது கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு

மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி, கனிமொழி எம்.பி., குறித்து அவதூறாக டுவிட்டரில் கருத்து பதிவிட்டது தொடர்பாக பா.ஜ.க., தேசிய செயலாளர் எச். ராஜா மீது கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி, கனிமொழி எம்.பி., குறித்து அவதூறாக டுவிட்டரில் கருத்து பதிவிட்டது தொடர்பாக பா.ஜ.க., தேசிய செயலாளர் எச். ராஜா மீது கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் எம்.பி., கனிமொழியை மறைமுகமாக தாக்கும் வகையில் பா.ஜ.க., தேசிய செயலாளர் எச். ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். இதற்கு தி.மு.க., மற்றும் பல்வேறு கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

அதாவது, பெண் செய்தியாளரின் கன்னத்தில் தொட்டதால் ஆளுநர் சர்ச்சையில் சிக்கிய விவகாரத்தில் ‘தி வீக்’ ஆங்கில இதழின் செய்தியாளர் லட்சுமி சுப்பிரமணியனுக்கு ஆதரவாக எம்.பி. கனிமொழி பதிவு வெளியிட்டார். இதற்கு, எச். ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘தன் கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தையை (illegitimate child) மாநிலங்களவை உறுப்பினராக்கிய தலைவரிடம், ஆளுநரிடம் கேட்டது போல் நிருபர்கள் கேள்வி கேட்பார்களா..? மாட்டார்கள். சிதம்பரம் உதயகுமார், அண்ணாநகர் ரமேஷ், பெரம்பலூர் சாதிக் பாட்ஷா நினைவு வந்து பயமுறுத்துமே,' என பதிவிட்டார்.

அவரின் இந்தப் பதிவு தி.மு.க.,வினர் மத்தியில் கடும் எதிர்ப்பை கிளப்பியது. இதனால், தி.மு.க.,வினர் தமிழ்நாடு முழுவதும் எச். ராஜாவின் உருவ பொம்மையை எரித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும், அவர் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி பல்வேறு இடங்களில் புகார் அளித்தனர். 

இந்த நிலையில், தி.மு.க.,வின் கணியூர் முன்னாள் பஞ்சாயத்து செயலாளர் வேலுச்சாமி என்பவர் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் கடந்த ஏப்ரல் மாதம் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் நேற்று இரவு போலீசார் எச். ராஜா மீது இந்திய தண்டனைச் சட்டம் 500 மற்றும் 501 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...