கோவையில் கண்கவர் கைவினைப் பொருட்களின் 3 நாள் கண்காட்சி இன்று தொடக்கம்

கோவை : கைவினை கலைஞர்களின் மேம்பாட்டிற்காக கிராப்ட் கவுன்சில் ஆப் தமிழ்நாடு சார்பில் நடத்தப்படும் கைவினைப் பொருட்களின் 3 நாள் கண்காட்சி கோவையில் இன்று தொடங்கியது.

கோவை : கைவினை கலைஞர்களின் மேம்பாட்டிற்காக கிராப்ட் கவுன்சில் ஆப் தமிழ்நாடு சார்பில் நடத்தப்படும் கைவினைப் பொருட்களின் 3 நாள் கண்காட்சி கோவையில் இன்று தொடங்கியது. 



கிராப்ட் கவுன்சில் ஆப் தமிழ்நாடு என்ற தொண்டு நிறுவனம், கடந்த 31 ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ள கைவினை கலைஞர்களின் மேம்பாட்டுக்காகப் பாடுபட்டு வருகிறது. இந்தத் தொண்டு நிறுவனம் கிராப்ட் கவுன்சில் ஆப் இந்தியா சென்னை மற்றும் கிராப்ட் கவுன்சில் ஆப் வோல்ட்டின் அங்கீகாரம் பெற்றது. இந்தத் தொண்டு நிறுவனத்தின் முக்கிய நோக்கமே கோவில்கள் மற்றும் வீடுகளில் பயன்படுத்தப்படும் ஆபரணங்களையும், மாலைகளையும் ஆவணப்படுத்துவதுதான். இதைத் தவிர, கற்கள், பனை இலைகள், உலோகத் தகடுகள் ஆகியவற்றை கொண்டு கைவினை பொருள்களை உருவாக்குவோருக்கு ஊக்கம் அளித்து வருகிறது. 



இந்தத் தொண்டு நிறுவனத்தின் சார்பில் 'சிருஷ்ட்டி' என்ற பிரத்யேகக் கண்காட்சி கோவையில் கடந்த 20 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இந்தக் கண்காட்சியில் மகேஸ்வரிஸ், சண்டீஸ், காஞ்சிவரம், சில்க் காட்டன்ஸ், கோடஸ், துஸார்ஸ், உபடாஸ், ஜோஜெட்டெட்ஸ், கிரெப்ஸ், பனாரஸ், சிக்ணிகாரி வேலை, பெங்கால் காட்டன்ஸ், காந்தா வேலை, பிளாக் பிரிண்ட்ஸ், கவுச் வொர்க், ஆந்திர சேலைகள் படோலா சேலைகள்.ஆகியவை இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. இதைத் தவிர, ஷர்ட், ஆடவர் ஆடைகள், குழந்தைகளுக்கான ஆடைகள், ஆபரணங்கள், கிப்ட் பொருள்கள், வீட்டு அலங்காரப் பொருள்கள் என அன்றாட வாழ்வுக்கு தேவையான பொருட்களும் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

இன்று முதல் 22-ம் தேதி வரை நடைபெறும் இந்த கிராப்ட் பஜார் கண்காட்சியில் 100-க்கும் மேற்பட்ட கைவினைக் கலைஞர்களின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அஸ்ஸாம் முதல் கேரளம் வரையுள்ள கைவினைக் கலைஞர்கள் இந்தக் கண்காட்சியில் பங்கேற்றுள்ளனர். இந்தக் கண்காட்சி மூலமாக பெறப்படும் நிதியானது கைவினை கலைஞர்களின் வாழ்க்கைக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். கடந்த ஆண்டு 118 மேற்பட்ட இடங்களில் இந்தக் கண்காட்சி நடைபெற்றுள்ளது. 

இந்த கண்காட்சியை கிராப் கவுன்சில் ஆப் தமிழ்நாடு தலைவர் ஜெய்ஸ்ரீ ரவி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். உடன் செயலாளர் சுஜினிபாலு, கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் லட்சுமி ராமச்சந்திரன், வெங்கடலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...