வனத்துறையில் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் : உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தகவல்

மதுரை: வனத்துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மதுரை: வனத்துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக வனத்துறையில் இருக்கும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் உள்ளிட்ட பல்வேறு காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என உயர்நீதிமன்ற உயர்மன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், என். சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் ஷம்பு கல்லோலிகர் ஆஜரானார். 

அப்போது, வனத்தை பாதுகாப்பதில் வேட்டைத் தடுப்பு காவலர்களின் பணி முக்கியமானது. கேரளாவில் வேட்டைத் தடுப்பு காவலர்களுக்கு நல்ல சம்பளம் வழங்கப்படுகிறது. அதுபோல் இங்கு வழங்கினால் என்ன..? அவர்களது பணியினை நிரந்தரம் செய்யாதது ஏன்..? வனத்தைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோருக்கு உயர்ரக, நவீன ஆயுதங்கள் வழங்காதது ஏன்..? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

வனத்துறை செயலாளர் ஷம்பு கல்லோலிகர் பதிலளித்தாவது :- வனத்துறையில் 6.000 பணியிடங்களில் 2.800 காலி பணியிடங்கள் உள்ளன. இதில், 1,000 பணியிடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி., அனுமதித்துள்ளது. விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். 

இதைத் தொடர்ந்து, நிலத்தடி நீருக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய மரங்களை அகற்றுவது குறித்து மத்திய, தமிழக அரசு வழக்கறிஞர்களின் வாதம் நடைபெற்றது. 

"யூகலிப்டஸ், சீகை மரங்களை பல கட்டங்களாக அகற்ற அனுமதி கோரி மத்திய அரசின் தேசிய வன உயிரின வாரிய நிலைக்குழுவின் அனுமதிக்கு திட்ட அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்ததும் பல கட்டங்களாக அகற்றப்படும்," என தமிழக அரசு வழக்கறிஞர் கூறினார். இதற்கு, அது பற்றி விபரங்கள் பெற்று தெரிவிக்க அவகாசம் தேவை, என மத்திய அரசு வழக்கறிஞர் பதிலளித்தார்.

மேலும், மின் கம்பங்களை உயரமாக மாற்றி அமைப்பது குறித்த நீதிபதிகளின் கேள்விக்கு தமிழக அரசு வழக்கறிஞர் பதிலளித்தாவது :- மின்சாரம் தாக்கி வன உயிரினங்கள் பலியாவதைத் தடுக்க, வனப்பகுதிகளில் தாழ்வான மின் கம்பிகளை மாற்றி உயரமாக அமைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றார். இதைத் தொடர்ந்து, பல்வேறு கட்ட விவாதங்களுக்குப் பிறகு, அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் அக்டோபர் 11-ம் தேதிக்கு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...