வார்டு வரையறை பணிகளால் உள்ளாட்சி தேர்தல் தாமதம் : அமைச்சர் எஸ்.பி., வேலுமணி விளக்கம்

நீலகிரி : தமிழகத்தில் வார்டு வரையறை செய்யும் பணிகள் நடந்து வருவதால் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது வருவதாக உள்ளாட்சி அமைச்சர் எஸ்.பி., வேலுமணி தெரிவித்துள்ளார்.

நீலகிரி : தமிழகத்தில் வார்டு வரையறை செய்யும் பணிகள் நடந்து வருவதால் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது வருவதாக உள்ளாட்சி அமைச்சர் எஸ்.பி., வேலுமணி தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தின் 150-வது ஆண்டு விழா மற்றும் பழங்குடியினர் விழா இன்று உதகையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி., வேலுமணி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். முன்னதாக, நீலகிரியின் முதல் மாவட்ட ஆட்சியராக இருந்த பிரிக்கஸ் நினைவாக 1847 ஆம் ஆண்டு பிரிக்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் மரம் நடும் விழாவில் கலந்துகொண்டார். 

இதனைத்தொடர்ந்து, உதகை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்ற விழாவில் நீலகிரி 150-வது ஆண்டை குறிக்கும் வகையில் லோகோ மற்றும் சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்டார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அம்மா இருசக்கர வாகனத்தினை பழங்குடியின பயனாளிகளுக்கு அமைச்சர் எஸ்.பி., வேலுமணி வழங்கினார். அப்போது, மாநிலங்களவை உறுப்பினர்கள் கே.ஆர். அர்ஜூணன், எ.கே., செல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் சி. கோபாலகிருஷ்ணன், குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் அ. சாந்திராமு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பேசியதாவது :- நீலகிரி மாவட்டத்தில் உள்ள பழங்கால கட்டிடங்களைப் பாதுகாக்க தமிழக அரசு ஆய்வு மேற்கொள்ள வேண்டும். உதகை ஏரியை புனரமைக்க ரூ. 5 கோடி நிதியுதவி அளிக்க தமிழக அரசுக்கு ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன் மீது பரிசீலனை மேற்கொள்ள வேண்டும். மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும். நீண்ட நாட்களாக பார்க்கிங் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். உதகை, குன்னூர் பேருந்து நிலையங்களை புனரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அவர் பேசினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் எஸ்.பி., வேலுமணி பேசுகையில், "பேசிய உள்ளாட்சித் துறை அமைச்சர் மாவட்டத்தின் எல்லைப் பகுதியான தெங்குமரஹாடா மக்கள் பயன்பெறும் வகையில் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டவும் ரூ. 9 கோடி நிதி தற்போதே ஒதுக்கப்படும். தமிழகத்தில் வார்டு வரையறைக்கும் பணி நடந்து வருவதால் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது," என்றார். 

முன்னதாக, பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது புகைப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், நிகழ்ச்சியில் பழங்குடியினரின் பாரம்பரிய நடனங்கள் நடைபெற்றன.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...