திருப்பூர் அருகே நூற்பாலை மேற்பார்வையாளர் கட்டையால் அடித்துக் கொலை : வடமாநிலத்தவர் 7 பேரிடம் விசாரணை

திருப்பூர் : பல்லடம் அருகே சித்தம்பலத்தில் நூற்பாலை மேற்பார்வையாளர் கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக வடமாநில தொழிலாளர்கள் 7 பேரைப் பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.


திருப்பூர்: பல்லடம் அருகே சித்தம்பலத்தில் நூற்பாலை மேற்பார்வையாளர் கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக வடமாநில தொழிலாளர்கள் 7 பேரைப் பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வீரக்குடி பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (44). இவர் தனது மனைவி வெங்கடேஸ்வரி மற்றும்  குணாநிதி, தயாநிதி ஆகிய இரண்டு மகன்களுடன் பல்லடம் வடுகபாளையத்தில் குடியிருந்து கொண்டு, சித்தம்பலம் அருகே உள்ள தனியார் நூற்பாலை ஒன்றில் மேற்பார்வையாளராக பத்து வருடங்களுக்கும் மேலாக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், நேற்று நள்ளிரவு நூற்பாலையில் வடமாநிலத் தொழிலாளர்கள் சிலர் மேற்பார்வையாளர் நாகராஜிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதில், நாகராஜ் கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து ஆலை நிர்வாகம் கொடுத்த புகாரினைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீஸ் மோப்பநாய் டெவில் உடன்  விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மோப்பநாய் நாகராஜின் உடலைச் சுற்றிவந்து அங்கேயே நின்றுவிட்டது. யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை.



இதையடுத்து, பல்லடம் போலீசார், நாகராஜின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், இக்கொலைக்கான காரணம் குறித்து நூற்பாலையில் வேலை செய்து வரும் வடமாநிலத் தொழிலாளர்கள் ஏழு பேரைப் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பல்லடத்தில் நூற்பாலை மேலாளர் ஒருவர் வடமாநிலத் தொழிலாளர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இச்சம்பவம் குறித்து கொலையானவரின் அண்ணன் ரவிச்சந்திரன் கூறுகையில், “தனது தம்பியின் கொலைக்கான காரணத்தை போலீசார் கண்டுபிடித்து கொலையாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தரவேண்டும். இறந்தவரது குடும்பத்தினருக்கு ஆலை நிர்வாகம் இழப்பீடு வழங்க வேண்டும்,” எனக் கேட்டுக்கொண்டார்.

Newsletter

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...