திருப்பூரில் காதலர்கள் தூக்கு மாட்டி தற்கொலை - போலீசார் விசாரணை

திருப்பூர் : திருப்பூரில் காதலர்கள் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் : திருப்பூரில் காதலர்கள் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தவமணி. இவர் திருப்பூர், கே.பி.என் காலனி பகுதிகள் குடும்பத்தோடு தங்கி பனியன் நிறுவனத்தில், வேலை செய்து வருகிறார். இவரது மகள் திவ்யா. அதேபோல மதுரை வாடிப்பட்டியை சேர்ந்த சேதுபாண்டி என்பவரது மகனான அருண்பாண்டி, திருப்பூர் காங்கயம் சாலையில் உள்ள தனியார் கார் ஷோரூம்மில் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். 

இந்நிலையில், திவ்யாவுக்கு, அருண்பாண்டியுடன் கடந்த 2 ஆண்டுகளாக காதல் ஏற்பட்டுள்ளது. இவர்களது, காதல் குறித்து இருவீட்டாருக்கும் தெரிந்து முதலில் கண்டித்துள்ளனர். பின்னர் சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கடந்த 3 மாதத்திற்கு முன்பு அருண் பாண்டியின் தந்தை சேதுபாண்டி இறந்துவிட்டார். இதனால், திவ்யா, அருண்பாண்டியின் காதல் திருமணம் தடைபட்டது. 



இந்நிலையில், கடந்த புதன்கிழமை இரவு திவ்யாவை, முத்தணம்பாளையத்தையடுத்த பொன்முத்துநகர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வருமாறு அருண்பாண்டி அழைத்துள்ளார். இதையடுத்து, மறுநாள் ஊருக்குச் சென்ற உறவினர்கள் வீடு திரும்பி பார்க்கையில், காதலர்கள் இருவரும் புத்தடை உடுத்தி தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. 

இதனையடுத்து, ரூரல் போலீசாருக்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். காதலர்கள் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...