மதுக்கரை பகுதிகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த 3 பேரை கைது செய்தது தனிப்படை போலீஸ்

கோவை : மதுக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த மூன்று பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை : மதுக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த மூன்று பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவையை அடுத்த மதுக்கரை காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே மர்ம நபர்கள் வீடு புகுந்து தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்தக் கொள்ளையர்களை பிடித்து, கொள்ளைக் குற்றங்களை தடுப்பது கோவை மாவட்ட போலீசாருக்கு பெரும் சவாலாக இருந்தது. இந்தக் கொள்ளையர்கள் குறித்து எந்த தடயமும் கிடைக்காத நிலையில், குற்றவாளிகளை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

மேலும், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் உத்தரவின் பேரில், பேரூர் துணை கண்காணிப்பாளர் வேல்முருகன் தலைமையில், வடவள்ளி காவல்நிலைய ஆய்வாளர் தூயமணி வெள்ளைச்சாமி, மதுக்கரை ஆய்வாளர் தங்கபாண்டியன், உதவி ஆய்வாளர்கள் ராஜ்குமார், நாகராஜ், சாஜஹான், தலைமை காவலர்கள் சஞ்சித், சதீஸ் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் வாகன சோதனை, சந்தேகப்படும் நபர்களை அழைத்து விசாரிப்பது, பழைய குற்றவாளிகள், வடமாநிலத்தவர் என பல தரப்பினரை பல்வேறு வகையில் விசாரணை செய்து வந்தனர்.

அதேபோல, தடையங்கள் இன்றி தொடர்ந்து திருட்டு நடந்த இடங்கள் அருகே இருந்த சி.சி.டி.வி., காட்சிகள் என அனைத்தையும் கைப்பற்றி தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக ஈரோடு காஞ்சிகோவில் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (29), சென்னை கொளத்தூரைச் சேர்ந்த ராஜா என்கிற மாணிக்கராஜா (28), சென்னை பொலிச்சலூரை சேர்ந்த ஹரிஹரன் (27) ஆகிய மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மதுக்கரை மற்றும் கோவையில் பல்வேறு பகுதிகளில் திருட்டு சம்பங்களில் இவர்களுக்கு தொடர்பிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்களிடமிருந்து கார், 2-எல்.இ.டி.டிவி., ஹோம் தியேட்டர், 6 சவரன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் ராஜா என்பவர் மீது சென்னையில் 70 திருட்டு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. 

Newsletter

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...