மாமன்ற தீர்மானங்களை உடனடியாக இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் : கோவை மாநகராட்சிக்கு உத்தரவு

கோவை : கோவை மாநகராட்சி மாமன்ற தீர்மானங்களை உடனடியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என கோவை மாநகராட்சிக்கு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம் உத்தரவிட்டுள்ளது.

கோவை : கோவை மாநகராட்சி மாமன்ற தீர்மானங்களை உடனடியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என கோவை மாநகராட்சிக்கு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி, சூயஸ் குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், கடந்த ஓராண்டுக்கு மேலாக, மாநகராட்சி மாமன்றத் தீர்மானங்கள் இணையதளத்தில் பதிவேற்றப்படவில்லை. மேலும், அரசியல் கட்சிப் பிரமுகர்களும் சமூக ஆர்வலர்களும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், இதுகுறித்த தகவல்களைக் கேட்டாலும், தகவல்கள் தொடர்ந்து வழங்கப்படாமலேயே இருந்தன.

இதையடுத்து, கோவை மாநகராட்சி இணையதளத்தில் தீர்மான நகல்கள் பதிவேற்றாமல் இருப்பது குறித்து, சமூக ஆர்வலர் எஸ்.பி.தியாகராஜன், உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தில் கடந்த மார்ச் மாதம் புகார் அளித்திருந்தார். இதைத்தொடர்ந்து, இருதரப்பினரிடமும் விளக்கம் கேட்கப்பட்டது.

இந்த நிலையில், கோவை மாநகராட்சி மாமன்ற தீர்மானங்களை உடனடியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என கோவை மாநகராட்சி ஆணைய க. விஜயகார்த்திகேயனுக்கு உள்ளாட்சி முறைமன்ற நடுவம் உத்தரவிட்டது. 

மேலும், மாமன்றத் தீர்மானங்கள் இணையதளத்தில் பதிவேற்றப்படாமல் இருப்பதற்கு சொல்லப்படும் காரணங்கள் ஏற்புடையதாக இல்லை. எனவே, கோவை மாநகராட்சியில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதற்கான நடவடிக்கையை உடனுக்குடன் மேற்கொள்வதுடன், 2017-ம் ஆண்டு ஜூலை முதல், தற்போது வரை மன்றத் தீர்மானங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...