கரையை ஆக்கிரமித்து போடப்படும் சாலையால் பழமையான குளம் உடையும் அபாயம் : ஜே.சி.பி., இயந்திரத்தை சிறைபிடித்த மக்கள்

கோவை: மேட்டுப்பாளையம் அருகே கரையை ஆக்கிரமித்து போடப்படும் சாலையால் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட பழமை வாய்ந்த குளம் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், ஜே.சி.பி இயந்திரத்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

கோவை: மேட்டுப்பாளையம் அருகே கரையை ஆக்கிரமித்து போடப்படும் சாலையால் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட பழமை வாய்ந்த குளம் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், ஜே.சி.பி இயந்திரத்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.



மேட்டுப்பாளையத்தில் உள்ள பெள்ளாதி கிராமத்தில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த முகலாயர் ஆட்சி காலத்தில் திப்புசூல்தான் கட்டிய குளம் உள்ளது. 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளத்தின் நீரினை ஆதாரமாகக் கொண்டு சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவுக்கு மேல் விவசாயம் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி கரையின் மறுபுறத்தில் பெள்ளாதி கிராம மக்களின் 2,000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் உள்ளன. 



இந்த நிலையில், இந்த குளத்தில் கரையை ஆக்கிரமித்து சிலர் இன்று ஜே.சி.பி., இயந்திரத்தின் மூலம் கரையை குடைந்து சாலை அமைக்கும் பணியினை மேற்கொண்டு வந்துள்ளனர். இந்தத் தகவலை அறிந்து வந்த அப்பகுதி பொதுமக்கள் அங்கு சாலை அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 

மேலும், பணியில் ஈடுபட்டிருந்த ஜே.சி.பி., இயந்திரத்தை சிறைபிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒருசில தனியாரின் நலனுக்காக குளத்தின் கரையை ஆக்கிரமித்து போடும் இந்த சாலையால், உறுதித்தன்மை இழந்து கரை உடையும் நிலை உருவாகும் எனக் கூறிய அப்பகுதி மக்கள், இதனால் தங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என அச்சம் தெரிவித்தனர். 



ஏற்கனவே, முக்கொம்பு உள்ளிட்ட பழமையான அணையின் கரைகள் உடைந்து வருவதால், இதுபோன்ற பழமையான குளங்களின் கரைகளை ஆக்கிரமிப்பு செய்வதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் வேடிக்கை பார்க்காமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். 

மேலும், இதனை தடுக்கத் தவறினால் மழை காலங்களில் அணை நிரம்பி கரை உடைந்து கிராமமே தண்ணீரில் மிதக்கும் நிலை உருவாகும். எனவே, மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

Newsletter

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...