பரளிக்காடு சூழல் சுற்றுலா மீண்டும் தொடக்கம்: திங்கட்கிழமை முதல் முன்பதிவு செய்யலாம் என அறிவிப்பு

கோவை: பில்லூர் அணைக்கான நீர்வரத்து குறைந்ததால் பரளிக்காடு சூழல் சுற்றுலா மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

கோவை: பில்லூர் அணைக்கான நீர்வரத்து குறைந்ததால் பரளிக்காடு சூழல் சுற்றுலா மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.



மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையின் நீர்தேக்க பகுதியான பரளிக்காடு என்னுமிடத்தில் வனத்துறை சார்பில் சூழல் சுற்றுலா நடத்தப்பட்டு வருகிறது. அடர்ந்த வனத்தின் நடுவே இயற்கை எழில் கொஞ்சும் இப்பகுதியில் காலை முதல் மாலை வரை நடத்தப்படும் இச்சூழல் சுற்றுலாவில் பங்கேற்று பரிசல் பயணம் செல்லவும், பசுமை காடுகளையும், அதில் வாழும் வன உயிரினங்கள் மற்றும் பறவைகளை கண்டு ரசிக்கவும் செய்யலாம். 

இதனை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமில்லாமல் அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வருகின்றனர். 

இந்த நிலையில், கடந்த மாதம் பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான கேரளக்காடுகள் மற்றும் நீலகிரி மலைப்பகுதியில் பெய்த தொடர் கனமழை காரணமாக பில்லூர் அணை நிரம்பியது. இதன் பின்னரும் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டது. 

இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணையில் இருந்து அதிகபட்சமாக வினாடிக்கு 57,000 கன அடி வரை உபரி நீர் பவானியாற்றில் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக கடும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. 

இதனால், பில்லூர் அணையின் நீர்தேக்கப் பகுதியில் சூழல் சுற்றுலா நடத்தப்பட்டு வந்த பகுதி முழுவதுமாக நீரில் மூழ்கியது. இதனையடுத்து, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி சூழல் சுற்றுலா தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக வனத்துறை அறிவித்தது. 

மேலும், ஆன்லைன் மூலம் பரளிக்காடு சூழல் சுற்றுலாவிற்கு செய்யப்பட்டு வந்த முன்பதிவும் நிறுத்தி வைக்கப்பட்டது. 

இந்த நிலையில், கடந்த இருவார காலமாக மழையின் அளவு குறைந்து அணைக்கான நீர்வரத்தும் படிப்படியாக குறைந்தது. இதனையடுத்து, சூழல் சுற்றுலா நடத்தப்பட்டு வந்த பகுதி சீர் செய்யப்பட்டு, மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக வனத்துறை அறிவித்துள்ளது. வரும் திங்கள் முதல் வழக்கம் போல் சூழல் சுற்றுலாவில் பங்கேற்க விரும்புவோர் வனத்துறையிடம் முன்பதிவு செய்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...