திருப்பூரில் சாலை விபத்தில் இரு கண்களை இழந்தவருக்கு லோக் அதாலத் மூலம் 1 கோடி இழப்பீடு

திருப்பூர் : திருப்பூரில் சாலை விபத்தில் இரு கண்களையும் இழந்தவருக்கு லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் மூலம் 1 கோடி ரூபாய்க்கான காசோலை இழப்பீடாக வழங்கப்பட்டது.

திருப்பூர் : திருப்பூரில் சாலை விபத்தில் இரு கண்களையும் இழந்தவருக்கு லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் மூலம் 1 கோடி ரூபாய்க்கான காசோலை இழப்பீடாக வழங்கப்பட்டது. 

திருப்பூர் காங்கேயம் சாலை அமர்ஜோதி கார்டனில் வசித்து ஜெயப்பிரகாஷ் பூபதி தனியார் டையிங்க் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். அப்போது பெருமாநல்லூர் சாலையில் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த போது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியதில் பூபதி பலத்த காயமடைந்தார். 



இந்த விபத்தில் அவரது இருகண்களும் பார்வை இழக்கும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து ஜெயபிரகாஷ் பூபதியின் மனைவி சுமதி விபத்திற்கு காரணமான வாகனத்தின் ஓட்டுநர் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு 2016 ஆம் ஆண்டு நவம்பர் முதல் இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.



இந்த நிலையில், இன்று திருப்பூரில் நடைபெற்ற லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றத்தில் இரு தரப்பினருக்கும் சமரசம் செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட ஜெயபிரகாஷ் பூபதிக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் இழப்பீடு தொகையாக 1 கோடி ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.

Newsletter

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...