பிரிக்கால் நிர்வாகம் - தொழிற்சங்கங்களின் இடையிலான முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி

கோவை: பிரிக்கால் நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையே நேற்று நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

கோவை: பிரிக்கால் நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையே நேற்று நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. 

பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள பிரிக்கால் ஆலை நிர்வாகம் பகுதி கதவடைப்பு என்ற பெயரில் 143 தொழிலாளர்களைக் கடந்த மாதம் 16-ம் தேதி முதல் வேலையில் இருந்து நீக்கியது. 

அவர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என வலியுறுத்தி பிரிக்கால் தொழிலாளர்கள் சங்கத்தினர் தொடர்ந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் 18 நாட்களை கடந்துள்ளது. இந்த விவகாரத்தில் நேரிடையாக தலையிட்டு சுமூக முடிவை எட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.



இதனிடையே, பிரிக்கால் நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையே முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, பகுதி கதவடைப்பு என்ற பெயரில் பணிநீக்கம் செய்யப்பட்ட 143 தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் உள்ளிட்ட 3 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தனர். 

ஆனால், பிரிக்கால் நிர்வாகம் அதனை ஏற்க மறுத்ததால், எந்தவித உடன்பாடும் எட்டாமல் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதைத் தொடர்ந்து, பிரிக்கால் நிர்வாகம், தொழிலாளர் துறை மற்றும் தொழிலாளர் சங்கங்கள் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், எந்தவித உடன்பாடும் ஏற்படாமல் இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. 

இது தொடர்பாக பிரிக்கால் நிர்வாகத்தின் தலைமை மக்கள் அதிகாரி ஆர். மலர்வண்ணன் கூறியதாவது :- பிரிக்கால் நிர்வாகத்தால் முன்மொழியப்பட்ட விதிகளில் மாற்றம் செய்ய வேண்டும் என தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. அதனை செய்ய நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால், தற்போது பகுதி கதவடைப்பு என்ற பெயரில் பணிநீக்கம் செய்யப்பட்ட 143 தொழிலாளர்களை எந்தவித கட்டுப்பாடுகளுமின்றி மீண்டும் பணியமர்த்த வலியுறுத்துகின்றனர். அவர்களில் 26 பேருக்கு ஏற்கனவே, பிரிக்கால் நிர்வாகம் பணி வழங்கியுள்ளது. 



ஏற்கனவே, கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர்கள் ஒற்றுமை சங்கம் பெரும்பான்மையுடையது என எழுத்துப்பூர்வமாக தொழிலாளர் நலத்துறைக்கு கடிதம் வழங்கப்பட்டுவிட்டது. ஆனால், தொழிற்சங்கத்தினர் ரகசிய வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். 

இந்த விவகாரத்தில் உடன்பாடு ஏற்பட வேண்டும் என முடிவு செய்துள்ள நிர்வாகம், தங்களது விதிமுறைகளில் பல்வேறு மாற்றங்களை செய்துள்ளது. ஆனால், தங்களது கோரிக்கைகளை நிறைவேறாத வரையில் போராட்டம் தொடரும் என தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர், என்றார். 

இதேபோல, தொழிற்சங்கத்தினர் கூறியதாவது :- பிரிக்கால் நிர்வாகம் தொழிற்சங்கத்தை கலைக்கவே முயற்சி செய்கிறது. 143 தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் உள்ளிட்ட 3 முக்கிய கோரிக்கைககள் முன்வைக்கப்பட்டது. 

அதேபோல, தொழிற்சங்கத்தினர் மீது தவறான கண்ணோட்டம் ஏற்பட்டு விட்டதால், மீண்டும் ரகசிய வாக்கெடுப்பை நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வலியுறுத்தி வருகிறோம். மேலும், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட நாட்களுக்கான ஊதியத்தை வழங்க நிர்வாகம் மறுக்கிறது. எனவே, இந்த விவகாரத்தை நீதிமன்றத்தின் மூலம் அணுக முடிவு செய்துள்ளோம், எனக் கூறினர். 

2-வது கட்டப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த நிலையில், வரும் 14-ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இது தொடர்பான செய்திகளை படிக்க

உடன்பாடின்றி முடிவடைந்த பிரிக்கால் நிர்வாகம் - தொழிற்சங்கங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரிக்கால் ஊழியர் சங்கத்தினர் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்

Newsletter

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...