உக்கடம் பெரியகுளத்தில் அமையவிருக்கும் பூங்கா: எதிர்ப்பு தெரிவிக்கும் ஆர்வலர்கள்

கோவை: உக்கடம் பெரியகுளத்தின் வடக்கு எல்லையில் கரையின் உயரத்தை குறைத்து அங்கு பூங்கா அமைக்கும் பணியில் மாநகராட்சியும், ஓயாசிஸ் (Oasis) நிறுவனமும் ஈடுபட்டுள்ளனர்.


கோவை: உக்கடம் பெரியகுளத்தின் வடக்கு எல்லையில் கரையின் உயரத்தை குறைத்து அங்கு பூங்கா அமைக்கும் பணியில் மாநகராட்சியும், ஓயாசிஸ் (Oasis) நிறுவனமும் ஈடுபட்டுள்ளனர்.

உக்கடம் பேரூர் பைபாஸ் சாலையில் அமையவிருக்கும் இந்த பூங்காவில், மக்கள் அமர்ந்து குளத்தின் அழகை ரசிக்கும்வண்ணம் இருக்கைகள், சைக்கிள் டிராக், கழிவறைகள், செடிகள் போன்றவை அமையவிருக்கின்றன. இந்த சூழலில், குளத்தின் கரையை குறைத்து இப்படியொரு பூங்கா தேவையா என்றும்? இது சூழலியலை பாதிக்கும் என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

 

கோவையில் உள்ள குளங்களை பராமரிக்கும் பொருட்டு ஓயாசிஸ் என்ற டெல்லியைச் சேர்ந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதன்படி, நரசாம்பதி, கிருஷ்ணாம்பதி, குமாரசாமி, செல்வம்பதி, செல்வசிந்தமணி, சிங்காநல்லூர் குளத்தேரி, பெரியகுளம் மற்றும் வாலாங்குளம் உள்ளிட்ட எட்டு குளங்களை இந்த நிறுவனம் இனி பராமரிக்க உள்ளது.

அதன் முதற்கட்ட பணியாகவே தற்போது உக்கடம் பெரியகுளத்தில் பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது இதற்கு இயற்கை ஆர்வலர்கள் மற்றும் சூழலியலாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இது குறித்து இந்த குளத்தை தூர்வாரிய சிறுதுளி அமைப்பின் நிறுவனர் வனிதா மோகன் கூறுகையில், "இரவு, பகல் பாராமல் இந்த குளத்தை தூய்மைப்படுத்த கோவை மக்கள் பலர் உழைத்துள்ளனர். தற்போது கரை உயரத்தைக் குறைத்து பூங்கா அமைப்பது குளத்தை சேதப்படுத்துவதைப் போல் உள்ளது.

குளத்தின் அழகை ரசிக்க விரும்பும் மக்கள் கரை ஏறி அதனைக் கண்டு ரசிக்கலாம். இதனால், குளத்தைச் சுற்றியுள்ள இயற்கை சூழல் பாதிக்கப்படும். வளர்ச்சி என்ற பெயரில் வளங்கள் அழிவதைத் தடுக்க வேண்டும்." என்றார். 



கரைப்பகுதியின் உயரத்தைக் குறைத்து அதன் மூலம் கிடைக்கும் மண்ணை மீண்டும் குளத்திலேயே கொட்டுவது, தன்னார்வலர்கள் செய்த பணியை வீணடிக்கும் விதமாக உள்ளதாகவும், இதனால், வாலங்குளத்திற்கு அதிக அளவில் நீர் செல்லும் நிலை ஏற்படும் என்றும் ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த பணியை தொடங்கும் முன், தன்னார்வலர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், இதனால் குளத்தின் அளவு குறையும் என்றும், குளக்கரையின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகும் என்றும் தொடர் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

குற்றச்சாட்டுகள் குறித்து ஓயாசிஸ் நிறுவனர் ஆகாஷ்-இடம் கேள்விகள் எழுப்பினோம். அவர் கூறுகையில், "இந்த ஒப்பந்தத்தை நாங்கள் அறிவியல் பூர்வமாகவே அணுகினோம். அமையவிருக்கும் பூங்காவால் இயற்கை மற்றும் குளத்தில் வாழும் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதில் தெளிவாக உள்ளோம்.

குளத்தை மாசு இல்லாமல் வைத்திருப்பதே இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கம். அங்கிருந்து எடுக்கும் மண்ணை குளத்தில் கொட்டவில்லை. மேலும், கரையின் உயரத்தைக் குறைத்து சரிவாக வைக்கிறோம். திட்டம் தொடர்பாக, அதிகாரிகளிடம் பேசுகையில் தன்னார்வலர்களும் இருந்தனர். ஆனால், அப்போது யாரும் கருத்துக்களை கூறவில்லை. மாறாக திட்டம் தொடங்கிய பின்னர் முரண்பாடான கருத்துக்களை கூறுகின்றனர்." என்றார்.

Newsletter

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...