கோவை: டெங்கு காய்ச்சல் பாதிப்பு அறிகுறி ஏற்பட்டுள்ள 3 பேர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோவை: டெங்கு காய்ச்சல் பாதிப்பு அறிகுறி ஏற்பட்டுள்ள 3 பேர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவியது. ஏராளமானோர் இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், இதனைக் கட்டுப்படுத்த மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக, கிராமப்புறங்கள், ஊர்பகுதிகள் மற்றும் குடியிருப்புகளில் தண்ணீர் தேங்காதவாறும், கொசுக்கள் உற்பத்தியை தடுக்க மருந்தும் தெளிக்கப்பட்டது. மேலும், டெங்கு காய்ச்சலில் இருந்து பாதுகாப்பாக இருக்க பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயமும் வழங்கப்பட்டது.
அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைவாகவே இருந்தது. இந்த நிலையில், தற்போது மீண்டும் டெங்கு காய்ச்சல் பாதிப்பில் கோவை அரசு மருத்துவமனையில் 3 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அன்னூரைச் சேர்ந்த கலைவாணி (52), கவுண்டம்பாளையம் ஜீவா நகரை சேர்ந்த பாலசந்தர் (23), பொள்ளாச்சியை சேர்ந்த சுப்பிரமணி (48) ஆகியோர் டெங்கு காய்ச்சல் அறிகுறியில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேபோல, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு, டெங்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டால், அவர்களுக்கு மர்ம காய்ச்சல் தொடர்பான அனைத்து சோதனைகளும் கோவை அரசு மருத்துவமனையில் செய்யப்படுகிறது.
கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவியது. ஏராளமானோர் இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், இதனைக் கட்டுப்படுத்த மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக, கிராமப்புறங்கள், ஊர்பகுதிகள் மற்றும் குடியிருப்புகளில் தண்ணீர் தேங்காதவாறும், கொசுக்கள் உற்பத்தியை தடுக்க மருந்தும் தெளிக்கப்பட்டது. மேலும், டெங்கு காய்ச்சலில் இருந்து பாதுகாப்பாக இருக்க பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயமும் வழங்கப்பட்டது.
அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைவாகவே இருந்தது. இந்த நிலையில், தற்போது மீண்டும் டெங்கு காய்ச்சல் பாதிப்பில் கோவை அரசு மருத்துவமனையில் 3 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அன்னூரைச் சேர்ந்த கலைவாணி (52), கவுண்டம்பாளையம் ஜீவா நகரை சேர்ந்த பாலசந்தர் (23), பொள்ளாச்சியை சேர்ந்த சுப்பிரமணி (48) ஆகியோர் டெங்கு காய்ச்சல் அறிகுறியில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேபோல, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு, டெங்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டால், அவர்களுக்கு மர்ம காய்ச்சல் தொடர்பான அனைத்து சோதனைகளும் கோவை அரசு மருத்துவமனையில் செய்யப்படுகிறது.