கோவை: தலித் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தால் துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி கோரி பொம்மை துப்பாக்கிகளுடன் வந்து திராவிடர் தமிழர் கட்சியினர் மாவட்ட வருவாய் துறை அலுவலரிடம் மனு அளித்தனர்.
கோவை: தலித் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தால் துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி கோரி பொம்மை துப்பாக்கிகளுடன் வந்து திராவிடர் தமிழர் கட்சியினர் மாவட்ட வருவாய் துறை அலுவலரிடம் மனு அளித்தனர்.
மக்கள் குறை தீர்ப்பு நாளான இன்று கோவை ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளுக்கு தீர்வு கோரி மனு அளிக்கப்பட்டது. இந்த நிலையில், துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி கோரி பொம்மை துப்பாக்கிகளுடன் வந்து திராவிடர் தமிழர் கட்சியினர் மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது :- நாட்டில் தலித்துகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. கோவையில் அருந்ததியர் மக்களுக்கு எதிராக தீண்டாமை கொடுமைகள் நடைபெற்று வருகிறது.
தீண்டாமை கொலைகள் தற்கொலைகளாகவும், விபத்து மரணங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. திராவிடர் தமிழர் கட்சியினர் தலித் மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு எஸ்.சி., எஸ்.டி., 1989 சட்டத்தின்படி, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்துக் கொள்ள உரிமங்களுக்கு பரிந்துரை செய்ய வேண்டும், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.