திருப்பூர்: திருப்பூரில் மாநில மாநாட்டில் கலந்து கொண்டு சொந்த ஊர் திரும்பிய மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை விலையில் பயணச்சீட்டு வழங்கவில்லை என்று கூறி, அவர்கள் திடீர் ரயில்நிலைய முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்: திருப்பூரில் மாநில மாநாட்டில் கலந்து கொண்டு சொந்த ஊர் திரும்பிய மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை விலையில் பயணச்சீட்டு வழங்கவில்லை என்று கூறி, அவர்கள் திடீர் ரயில்நிலைய முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் 3-வது மாநில மாநாடு திருப்பூரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. மாநாடு முடிவடைந்து மாற்றுத்திறனாளிகள் அனைவரும் அவரவர் சொந்த ஊர்களுக்குச் செல்ல திருப்பூர் ரயில் நிலையம் சென்றனர்.
அப்போது, அவர்களுக்கு சலுகை விலையில் பயணச்சீட்டு வழங்காமல் ரயில்வே ஊழியர்கள் அலைக்கழித்ததாக தெரிகிறது. இதனால், அதிருப்தி அடைந்த மாற்றுத்திறனாளிகள், ரயில்நிலைய முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கிருந்த அதிகாரிகள் சலுகை விலை பயணச்சீட்டு வழங்கியதைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
சலுகைகள் மற்றும் உரிமைகளைப் பெற நடைபெற மாநாட்டிற்குச் சென்ற மாற்றுத்திறனாளிகள் மாநாடு முடிந்த கையோடு, போராட்டத்தில் ஈடுபட்டு சலுகையை பெற்ற சம்பவம் ஒட்டுமொத்த மாற்றுத்திறனாளிகளையும் அதிருப்தியடையச் செய்துள்ளது.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் 3-வது மாநில மாநாடு திருப்பூரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. மாநாடு முடிவடைந்து மாற்றுத்திறனாளிகள் அனைவரும் அவரவர் சொந்த ஊர்களுக்குச் செல்ல திருப்பூர் ரயில் நிலையம் சென்றனர்.
அப்போது, அவர்களுக்கு சலுகை விலையில் பயணச்சீட்டு வழங்காமல் ரயில்வே ஊழியர்கள் அலைக்கழித்ததாக தெரிகிறது. இதனால், அதிருப்தி அடைந்த மாற்றுத்திறனாளிகள், ரயில்நிலைய முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கிருந்த அதிகாரிகள் சலுகை விலை பயணச்சீட்டு வழங்கியதைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
சலுகைகள் மற்றும் உரிமைகளைப் பெற நடைபெற மாநாட்டிற்குச் சென்ற மாற்றுத்திறனாளிகள் மாநாடு முடிந்த கையோடு, போராட்டத்தில் ஈடுபட்டு சலுகையை பெற்ற சம்பவம் ஒட்டுமொத்த மாற்றுத்திறனாளிகளையும் அதிருப்தியடையச் செய்துள்ளது.