திருப்பூர்: இரக்கமில்லா வகையில் மாற்றுத்திறனாளிகளின் வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குவதற்குக் கூட மத்திய அரசு ஜி.எஸ்.டி வரி விதித்திருப்பதாக, திருப்பூரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் மாநில மாநாட்டின் பொதுக்கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் பேசினார்.
திருப்பூர்: இரக்கமில்லா வகையில் மாற்றுத்திறனாளிகளின் வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குவதற்குக் கூட மத்திய அரசு ஜி.எஸ்.டி வரி விதித்திருப்பதாக, திருப்பூரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் மாநில மாநாட்டின் பொதுக்கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் பேசினார்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் 3-வது மாநில மாநாடு திருப்பூரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) துவங்கியது. மாநாட்டின் துவக்கமாக திருப்பூர் யுனிவர்சல் சாலையிலிருந்து துவங்கிய மாற்றுத்திறனாளிகளின் பேரணி, குமரன் சாலை வழியாக டவுன்ஹாலில் நிறைவடைந்தது.

இதில் மாற்றுத்திறனாளிகளின் இட ஒதுக்கீட்டின் படி வேலைவாய்ப்பினை வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெறுவதை எளிதாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியவாறே, 1000-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாகச் சென்றனர்.

பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், "நம் நாட்டில் அரசு பினாமியாக இருந்து வருகிறது. நம்முடைய உச்ச நம்பிக்கையான உச்ச நீதிமன்றமோ நடிகை கண் அடித்ததை 3 நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்து விசாரணை நடத்தும் அளவில் உள்ளது.
இதனால், மக்கள் உச்சநீதிமன்றத்தின் நம்பிக்கையை இழந்து வருகின்றனர். முன்னெப்போதும் இல்லாத வகையாக மாற்றுத்திறனாளிகளின் வாகனங்களுக்கும், உபகரணங்களுக்கும் கூட இரக்கமில்லாமல் ஜி.எஸ்.டி வரியினை மத்திய அரசு விதித்துள்ளது." என்றார்.
இந்த பொதுக்கூட்டத்தில் மாநிலம் முழுவதுமிருந்து வந்திருந்த மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் 3-வது மாநில மாநாடு திருப்பூரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) துவங்கியது. மாநாட்டின் துவக்கமாக திருப்பூர் யுனிவர்சல் சாலையிலிருந்து துவங்கிய மாற்றுத்திறனாளிகளின் பேரணி, குமரன் சாலை வழியாக டவுன்ஹாலில் நிறைவடைந்தது.

இதில் மாற்றுத்திறனாளிகளின் இட ஒதுக்கீட்டின் படி வேலைவாய்ப்பினை வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெறுவதை எளிதாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியவாறே, 1000-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாகச் சென்றனர்.

பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், "நம் நாட்டில் அரசு பினாமியாக இருந்து வருகிறது. நம்முடைய உச்ச நம்பிக்கையான உச்ச நீதிமன்றமோ நடிகை கண் அடித்ததை 3 நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்து விசாரணை நடத்தும் அளவில் உள்ளது.
இதனால், மக்கள் உச்சநீதிமன்றத்தின் நம்பிக்கையை இழந்து வருகின்றனர். முன்னெப்போதும் இல்லாத வகையாக மாற்றுத்திறனாளிகளின் வாகனங்களுக்கும், உபகரணங்களுக்கும் கூட இரக்கமில்லாமல் ஜி.எஸ்.டி வரியினை மத்திய அரசு விதித்துள்ளது." என்றார்.
இந்த பொதுக்கூட்டத்தில் மாநிலம் முழுவதுமிருந்து வந்திருந்த மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.