கோவை: கோயமுத்தூர் சொஸைட்டி ஆப் ஆப்தால்மிக் சர்ஜன்ஸ் மற்றும் இந்திய மருத்துவ சங்க கோவை கிளையுடன் இணைந்து இன்று கோவையில் கண் தானம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கோவை: கோயமுத்தூர் சொஸைட்டி ஆப் ஆப்தால்மிக் சர்ஜன்ஸ் மற்றும் இந்திய மருத்துவ சங்க கோவை கிளையுடன் இணைந்து இன்று கோவையில் கண் தானம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கண் தானம் இரு வார விழா ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 25-ம் தேதி முதல் செப்டம்பர் 8-ம் தேதி வரை அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த இரு வார விழா மக்களிடையே கண் தானம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மக்களிடையே கண் தானத்தை ஊக்குவிப்பதற்காகவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கண் தானம் விழிப்புணர்வு பேரணியை கோயமுத்தூர் மாநகர காவல் துறை துணை ஆணையாளர் (போக்குவரத்து) சுஜித் குமார் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இப்பேரணியில் கோயம்புத்தூர் சொஸைட்டி ஆப் ஆப்தால்மிக் சர்ஜன்ஸ் மருத்துவர்கள், ஹிமன்அனிமல் ஸ்சொஸைட்டி, கோயம்பத்தூர் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள், அரவிந்த் கண் மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் கண் வங்கி பணியாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த பேரணியில் ஹிமன்அனிமல் ஸ்சொஸைட்டி சார்பில் 10-க்கும் மேற்பட்ட நாய்கள் கலந்து கொண்டன. இதில் கண் பார்வையற்ற ஒரு நாயும், கால்களை இழந்த ஒரு நாய் குட்டியும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.