கோவை: பொது சிவில் சட்டத்திற்கு எதிராக அறிக்கை தாக்கல் செய்த சட்ட ஆணையத்திற்கு இந்திய முஸ்லீம் கட்சி பாராட்டு தெரிவித்துள்ளது.
கோவை: பொது சிவில் சட்டத்திற்கு எதிராக அறிக்கை தாக்கல் செய்த சட்ட ஆணையத்திற்கு இந்திய முஸ்லீம் கட்சி பாராட்டு தெரிவித்துள்ளது.
நாட்டில், பல்வேறு மதத்தினருக்கும் தனித்தனியாக, தனிநபர் சட்டங்கள் உள்ளன. இதற்கு மாற்றாக, அனைத்து மதத்தினருக்கும் பொதுவான சிவில் சட்டம் கொண்டு வருவது குறித்து நீண்ட காலமாக பேசப்பட்டு வருகிறது. பொது சிவில் சட்டம் கொண்டு வருவது குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும்படி, சட்ட ஆணையத்தை 2016ல் மத்திய அரசு கேட்டுக் கொண்டது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இது தொடர்பாக, பல்வேறு தரப்பினருடன், சட்ட ஆணையம் ஆலோசனை நடத்தியது. இந்த நிலையில், பொது சிவில் சட்டம் தொடர்பான விவாத அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், பொது சிவில் சட்டம் என்பது மிகவும் விரிவானது. இதுவரை நம் நாட்டில் சோதித்து பார்க்கப்படாத விமர்சனங்களை உருவாக்கக் கூடியது. எனவே, பொது சிவில் சட்டம் தற்போது தேவையில்லை என இந்திய சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது.
சட்ட ஆணையத்தின் இந்த முடிவுக்கு இந்திய முஸ்லீம் கட்சியின் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான கே.எம். காதர் மொய்தீன் வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும், சட்ட ஆணையத்தின் நடவடிக்கை பாராட்டுக்குரியது எனக் கூறிய அவர், ஆர்டிகல் 44-ஐ ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
நாட்டில், பல்வேறு மதத்தினருக்கும் தனித்தனியாக, தனிநபர் சட்டங்கள் உள்ளன. இதற்கு மாற்றாக, அனைத்து மதத்தினருக்கும் பொதுவான சிவில் சட்டம் கொண்டு வருவது குறித்து நீண்ட காலமாக பேசப்பட்டு வருகிறது. பொது சிவில் சட்டம் கொண்டு வருவது குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும்படி, சட்ட ஆணையத்தை 2016ல் மத்திய அரசு கேட்டுக் கொண்டது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இது தொடர்பாக, பல்வேறு தரப்பினருடன், சட்ட ஆணையம் ஆலோசனை நடத்தியது. இந்த நிலையில், பொது சிவில் சட்டம் தொடர்பான விவாத அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், பொது சிவில் சட்டம் என்பது மிகவும் விரிவானது. இதுவரை நம் நாட்டில் சோதித்து பார்க்கப்படாத விமர்சனங்களை உருவாக்கக் கூடியது. எனவே, பொது சிவில் சட்டம் தற்போது தேவையில்லை என இந்திய சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது.
சட்ட ஆணையத்தின் இந்த முடிவுக்கு இந்திய முஸ்லீம் கட்சியின் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான கே.எம். காதர் மொய்தீன் வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும், சட்ட ஆணையத்தின் நடவடிக்கை பாராட்டுக்குரியது எனக் கூறிய அவர், ஆர்டிகல் 44-ஐ ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.