கோவை : பேரூர் ஆதினமாக இருந்த கோவை சாந்தலிங்க இராமசாமி அடிகளாரின் மறைவிற்கு இளைஞர் பேரவை தலைவரும். எம்.எல்.ஏ.,வுமான தனியரசு அஞ்சலி செலுத்தினார்.
கோவை: பேரூர் ஆதினமாக இருந்த கோவை சாந்தலிங்க இராமசாமி அடிகளாரின் மறைவிற்கு இளைஞர் பேரவை தலைவரும். எம்.எல்.ஏ.,வுமான தனியரசு அஞ்சலி செலுத்தினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- தமிழ் வழியையும், சைவத்தையும் இணைத்து பயணித்தவர் சாந்தலிங்க ராமசாமி அடிகளார். இவர் தமிழ் கல்லூரியை நிறுவி தமிழும், சைவமும் இணைந்து பயணிக்க வழிவகை செய்த பெருமையைப் பெற்றுள்ளார். மேலும், ஆதரவற்ற நிலையில், இருக்கும் குழந்தைகளுக்கு வாழ்வளித்துள்ளார். பேரூர் ஆதீன மடம் சலவை கற்களால் ஆன மடமல்ல. பழமை மாறாமல் அன்பு தவழும் இடமாக பேரூர் ஆதீனம் திகழ்ந்துள்ளார். அடிகளாரின் மறைவு தமிழ்தேச அன்பர்களுக்கும், தமிழுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு, என்றார்
