முதலமைச்சர் நினைப்பில் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார் ஸ்டாலின் : கோவையில் அமைச்சர் எஸ்.பி., வேலுமணி விமர்சனம்

கோவை: தி.மு.க., தலைவராகப் பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின், முதலமைச்சராகி விட்டதாக நினைத்துக் கொண்டு ஆதரமாற்றக் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக கோவையில் அமைச்சர் எஸ்.பி., வேலுமணி விமர்சித்துள்ளார்.

கோவை: தி.மு.க., தலைவராகப் பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின், முதலமைச்சராகி விட்டதாக நினைத்துக் கொண்டு ஆதரமாற்றக் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக கோவையில் அமைச்சர் எஸ்.பி., வேலுமணி விமர்சித்துள்ளார்.

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது :- பாரம்பரியமிக்க ஒரு கட்சியான தி.மு.க.,வில் வாரிசு அடிப்படையில் தலைவராக தேர்வு செய்யப்பட்ட மு.க.ஸ்டாலின், ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகிறார். உலகின் பணக்கார குடும்பங்களில் 10-வது குடும்பம் எனக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து முதலில் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும். அ.தி.மு.க., அரசின் சாதனைகளை பொறுத்துக் கொள்ள முடியாமல் ஸ்டாலின் தொடர்ச்சியாக இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். 

முந்தைய தி.மு.க., ஆட்சியில் குடிநீர் திட்டங்களுக்காக ரூ. 7,000 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்ட நிலையில், அ.தி.மு.க., அரசு 5 ஆண்டுகளில் ரூ. 21,988 கோடியை ஒதுக்கியுள்ளது. மாநிலம் முழுவதும் 4,900 கோடி மில்லியன் லிட்டராக இருந்த குடிநீர் வினியோகத்தில் 2,400 மில்லியன் லிட்டர் கூடுதலாக வழங்கப்பட்டு வருகிறது. 8 கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கு டெண்டர் வழங்காமல் பாதியிலேயே தி.மு.க., அரசு விட்டுச்சென்றது. அந்த திட்டங்கள் அனைத்தும் தற்போது அ.தி.மு.க., ஆட்சியில் முழு வேகத்தில் நடந்து வருகிறது. 

இதேபோல, சாலை, பாலங்கள், வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட 7 துறைகளில் அ.தி.மு.க., அரசு முனைப்புடன் திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. டெண்டர்களும் இணைய வழி டெண்டர்களாகவே வழங்கப்பட்டு வருகிறது. எல்.ஈ.டி., விளக்குகள் தொடர்பான குற்றச்சாட்டில் உண்மை இல்லை. 7 ஆண்டு பராமரிப்பு என்ற திட்டத்தின் அடிப்படையில் டெண்டர்கள் விடப்பட்டுள்ளதால், ஆண்டுக்கு ரூ. 300 கோடி வரை அரசுக்கு மின்கட்டணம் மிச்சமாகியுள்ளது. 

ஒரு கட்சிக்கு தலைவராக இருந்து கொண்டு ஸ்டாலின் வெளியிட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டு அதிர்ச்சி அளிக்கிறது. ஸ்டாலின் துணை முதலமைச்சராக ஆட்சியில் இருக்கும் போது ஈழப் படுகொலைகளை தடுத்திருக்கலாம். அப்போது, மவுனமாக இருந்து விட்டு, தற்போது பேசுவது ஏன்..?. ஸ்டாலின் ஒரு கட்சிக்கு தான் தலைவராகி இருக்கிறார். அவர் முதலமைச்சர் ஆகவில்லை. அவர் முதலமைச்சராகி விட்டதாக நினைத்துக் கொண்டு குற்றச்சாட்டுக்களை அடுக்கி வருகிறார், எனக் கூறினார். 

Newsletter

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...