கோவை : அவிநாசி சாலைக்கும் திருச்சி சாலைக்கும் இடையில் உள்ள புலியகுளம் பகுதியில் நாள்தோறும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: அவிநாசி சாலைக்கும் திருச்சி சாலைக்கும் இடையில் உள்ள புலியகுளம் பகுதியில் நாள்தோறும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை புலியகுளம் பகுதியானது அவிநாசி சாலையையும், திருச்சி சாலையையும் இணைக்கும் முக்கிய பகுதியாக உள்ளது. இந்த சாலையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், இந்த சாலையை கடந்து செல்பவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்தப் போக்குவரத்து நெரிசலால் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. இந்தப் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கைகள் வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

ஆகவே, பொதுமக்கள் இந்த நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளனர். தங்களது கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்காவிடில் ஒன்றிணைந்து பொதுமக்கள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
இது குறித்து இந்த பகுதி வாசியான தம்பு கூறியதாவது:- புலியகுளம் பகுதியில் தொடர்ந்து சில மாதங்களாக போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், அடிக்கடி சிறிய சிறிய விபத்துகள் ஏற்படுகின்றன. இதைத் தடுக்க போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படும் நேரங்களில் போலீசார் சாலை பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். அப்படி ஈடுபடுவதன் மூலம் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதுடன் பொதுமக்களுக்குப் பாதுகாப்பான பயணத்தை கொடுக்கலாம், என்றார்.