கோவை : ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் குறித்து விமர்சனம் செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை : ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் குறித்து விமர்சனம் செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடந்த மாதம் சேலத்தில் நடைபெற்ற அ.தி.மு.க., கட்சி கூட்டத்தில், ஆசிரியர்களின் ஊதிய வரலாற்றைப் பற்றி அறியாமல் தரக்குறைவாக பேசியதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, வருமான வரியை அரசு ஊழியர்கள் முறையாக செலுத்தி வருகிறோம், ஊழலில் ஈடுபட்டு சிறைக்கு செல்லவில்லை, அளவுக்கு அதிகமாக சொத்து சேர்க்கவில்லை எனக் கூறி முதலமைச்சருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும், முதலமைச்சர் தனது கருத்துக்களை வாபஸ் பெற வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். இந்தப் போராட்டத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் ,ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் குமார் கூறியதாவது :- இந்திய அரசியில் அமைப்பு சட்டத்தை மதிக்காமல் ரகசிய பிரமாணம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆசிரியர்கள் ஊதிய வரலாற்றைப் பற்றி அறியாமல் தரக் குறைவாக பேசியதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதனை வாபஸ் பெற வேண்டும். மேலும், தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் என்பது மத்திய அரசு வழங்கிட கூடிய புள்ளிகளில் இருந்து போராடி பெற்றது, என்றார்.
கடந்த மாதம் சேலத்தில் நடைபெற்ற அ.தி.மு.க., கட்சி கூட்டத்தில், ஆசிரியர்களின் ஊதிய வரலாற்றைப் பற்றி அறியாமல் தரக்குறைவாக பேசியதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, வருமான வரியை அரசு ஊழியர்கள் முறையாக செலுத்தி வருகிறோம், ஊழலில் ஈடுபட்டு சிறைக்கு செல்லவில்லை, அளவுக்கு அதிகமாக சொத்து சேர்க்கவில்லை எனக் கூறி முதலமைச்சருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும், முதலமைச்சர் தனது கருத்துக்களை வாபஸ் பெற வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். இந்தப் போராட்டத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் ,ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் குமார் கூறியதாவது :- இந்திய அரசியில் அமைப்பு சட்டத்தை மதிக்காமல் ரகசிய பிரமாணம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆசிரியர்கள் ஊதிய வரலாற்றைப் பற்றி அறியாமல் தரக் குறைவாக பேசியதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதனை வாபஸ் பெற வேண்டும். மேலும், தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் என்பது மத்திய அரசு வழங்கிட கூடிய புள்ளிகளில் இருந்து போராடி பெற்றது, என்றார்.